Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 8 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு
மத்திய அரசின் தடுமாற்றங்கள் காரணமாக, பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? என்பதில் மக்கள் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை ஓரளவிற்கு குறைய தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை தற்போது பெரிய தடை கல்லாக உள்ளது. இந்த குறையையும் போக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் மிகப்பெரிய ஊக்கமே ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என அத்துறையை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை கடந்த 2 தசாப்தங்களில், அதாவது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மிக கடுமையாக சரிந்து வருகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவும் ஒரு காரணம் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் பொதுமக்களும் சற்று குழம்பிதான் உள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதா? அல்லது வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் காணப்படவே செய்கிறது.
முன்னதாக இந்தியாவை படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக நிதி ஆயோக் சமீபத்தில் மத்திய அரசுக்கு சில யோசனைகளை தெரிவித்திருந்தது. இதன்படி வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரை செய்திருந்தது.
அதேபோல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து இரு சக்கர வாகனங்களும் (150 சிசி மற்றும் அதற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட) எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் தனது பரிந்துரைகளில் தெரிவித்திருந்தது.
அதே சமயம் வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் யோசனை கூறியிருந்தது. இதனிடையே நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது தொடர்பான காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை என்றும், அதனை சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் நிர்ணயம் செய்யாது எனவும் கூறினார். அத்துடன் ஏராளமான மாநில அரசுகள் எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்து கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது இயற்கையான வழிமுறையில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புது டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதான் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். நிதின் கட்கரியின் இந்த பேட்டி ஆட்டோமொபைல் துறையினரை நிம்மதி பெரு மூச்சு விட வைத்துள்ளது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் விஷயத்தில் மத்திய அரசும், நிதி ஆயோக்கும் பயங்கரமான குழப்பத்தில் உள்ளதா? என்று எண்ண தோன்றுகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது ஒரு சில ஆண்டுகளில் நடக்கும் என சில சமயங்களில் அவர்கள் அறிவிக்கின்றனர்.
அப்படி இருக்க மாற்றத்திற்கான காலக்கெடு எதுவும் இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். இது போன்ற குழப்பங்களால், மின்சார வாகனங்களுக்கு மாறுவது தொடர்பாக அவர்களிடம் திடமான முடிவு எதுவும் இல்லையோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கை முடிவுகளில் மத்திய அரசு தடுமாறுவதாக ஆட்டோமொபைல் துறையினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் தடுமாற்றங்கள் மக்களுடன் சேர்த்து ஆட்டோமொபைல் துறையை சார்ந்தவர்களையும் கடுமையான குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. எனவே மத்திய அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே