Just In
- 1 hr ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 1 hr ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 2 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 3 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு
மத்திய அரசின் தடுமாற்றங்கள் காரணமாக, பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? என்பதில் மக்கள் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை ஓரளவிற்கு குறைய தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை தற்போது பெரிய தடை கல்லாக உள்ளது. இந்த குறையையும் போக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் மிகப்பெரிய ஊக்கமே ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என அத்துறையை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை கடந்த 2 தசாப்தங்களில், அதாவது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மிக கடுமையாக சரிந்து வருகிறது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவும் ஒரு காரணம் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் பொதுமக்களும் சற்று குழம்பிதான் உள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதா? அல்லது வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் காணப்படவே செய்கிறது.
முன்னதாக இந்தியாவை படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக நிதி ஆயோக் சமீபத்தில் மத்திய அரசுக்கு சில யோசனைகளை தெரிவித்திருந்தது. இதன்படி வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரை செய்திருந்தது.
அதேபோல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து இரு சக்கர வாகனங்களும் (150 சிசி மற்றும் அதற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட) எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் தனது பரிந்துரைகளில் தெரிவித்திருந்தது.
அதே சமயம் வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் யோசனை கூறியிருந்தது. இதனிடையே நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது தொடர்பான காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை என்றும், அதனை சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் நிர்ணயம் செய்யாது எனவும் கூறினார். அத்துடன் ஏராளமான மாநில அரசுகள் எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்து கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது இயற்கையான வழிமுறையில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புது டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதான் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். நிதின் கட்கரியின் இந்த பேட்டி ஆட்டோமொபைல் துறையினரை நிம்மதி பெரு மூச்சு விட வைத்துள்ளது.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் விஷயத்தில் மத்திய அரசும், நிதி ஆயோக்கும் பயங்கரமான குழப்பத்தில் உள்ளதா? என்று எண்ண தோன்றுகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது ஒரு சில ஆண்டுகளில் நடக்கும் என சில சமயங்களில் அவர்கள் அறிவிக்கின்றனர்.
அப்படி இருக்க மாற்றத்திற்கான காலக்கெடு எதுவும் இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். இது போன்ற குழப்பங்களால், மின்சார வாகனங்களுக்கு மாறுவது தொடர்பாக அவர்களிடம் திடமான முடிவு எதுவும் இல்லையோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கை முடிவுகளில் மத்திய அரசு தடுமாறுவதாக ஆட்டோமொபைல் துறையினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் தடுமாற்றங்கள் மக்களுடன் சேர்த்து ஆட்டோமொபைல் துறையை சார்ந்தவர்களையும் கடுமையான குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. எனவே மத்திய அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!