Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போலீசுக்கு எதிராக ஒன்று கூடிய பொதுமக்கள்... வீடியோ வெளியிட்டு பாடம் கற்பித்த பெண்!!!
விதிமீறலில் ஈடுபட்டுவிட்டு, நான் அவனில்லை என நைசாக நழுவிய போலீஸ் அதிகாரிக்கு தக்க பாடம் கற்பித்துள்ளார் இளம்பெண் ஒருவர். இச்சம்பவம் குறித்து வைரலாகும் வீடியோ பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் விதமாக புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சட்டம் நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், புதிதாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதே மிக முக்கியமானதாக இருக்கின்றது.
ஏனென்றால், புதிய அபாரத திட்டமானது, இதுவரை இல்லாத அளவிற்கு பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகையால், முன்னதாக ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ. 100 என்ற அபராதம், தற்போது ஆயிரம் ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அனைத்து விதிமீறல்களுக்குமான அபராதமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த அளவிலான அபராதத்தை விதிப்பதுகுறித்த ஆலோசனை பேச்சுவார்த்தை ஒரு சில மாநிலங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இந்த அதிகபட்ச அபராதத்தை குறைத்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், டெல்லி, ஹரியானா மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, உச்சபட்ச அபராதம் தொகை விதிமீறிலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அம்மாநில மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவரின் தவற்றை சுட்டிக்காட்டும் வகையில் பொதுமக்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் சிறிதளவும் கருணையின்றி விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உச்சபட்ச அபராதத்தை விதித்து வருகின்றனர்.
அவ்வாறு, அவர்கள் விதிக்கும் அபராதத் தொகை சில நேரங்களில் வாகனத்தின் விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானதாக இருக்கின்றது.
இந்த நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவரின் கார் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதை பொதுமக்கள் சிலர் கண்டுபிடித்தனர். மேலும், அந்த தவற்றை உணர்த்தும் வகையில், வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது அதிவேகமாக வைரலாகி வருகின்றது.
இந்த சம்பவம், தலைநகர் புது டெல்லியில் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, போக்குவரத்துத்துறை போலீஸாரின் ஹூண்டாய் அக்செண்ட் காரின் ஜன்னல்கள் கருப்பு நிற கண்ணாடிகளைக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கார் ஜன்னல்களுக்கு இதுபோன்று கருப்பு நிறத்திலான கண்ணாடிகளைப் பொருத்துவது குற்றமாகும்.
அதுமட்டுமின்றி, அந்த கார் பதிவு சான்று, காப்பீடு, மாசுகட்டுப்பாடு சான்று உள்ளிட்ட முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், அந்த காருக்கு சொந்தக்காரர் என கூறப்படும் காவல் அதிகாரி முறையான ஓட்டுநர் உரிமைத்தையும் பெறவில்லை என தெரிகின்றது.
ஆகையால், அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை அழைத்து அந்த வாகனத்தின்மீதும், அதன் உரிமையாளராக இருக்கும் போக்குவரத்து காவலர் மீதும் வழக்கு பதிந்து அபராத செல்லாணை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸார், அங்கு கூடியிருந்த பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக, அந்த கார் தன்னுடையதே இல்லை என அந்த போக்குவரத்து காவலர் தெரிவித்தார். ஆனால், அது அவருடையதுதான் என அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர் கூறினர்.
இருப்பினும், அங்கு திரண்டிருந்த மக்கள் விடாப் பிடியாக, விதிமீறலில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய் அக்செண்ட் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என கடுமையான வாக்குவதத்தில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஹூண்டாய் அக்செண்ட் கார்மீது வழக்கு பதிந்து, அந்த காரை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த பெண் ஒருவர், அவரது செல்போனில் காட்சிப்படுத்தியிருந்தார். அதுதான் தற்போது இணையதளம், செய்தி என அனைத்திலும் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஹூண்டாய் அக்செண்ட் கார், சப்ஸி மண்டி பகுதியில் உள்ள காவல்நிலையத்தின் கான்ஸ்டபிள் விஷால் தபாஸ் என்பவருடையது என தெரியவந்துள்ளது. இவர் மீதும், விதிமீறலில் ஈடுபட்டிருந்த கார்மீதும் என்ன மாதரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதுகுறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!