Just In
- 48 min ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 5 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 6 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 6 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
போலீஸின் அடாவடி தனத்தால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி: குமுறும் இளைஞர்... அதிர்ச்சி தகவல்!
போலீஸாரின் அடாவடி தனத்தால் வாகன ஓட்டிக்கு தவறான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும்விதமாக புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது அமலுக்கு வந்த நாள் (செப்டம்பர் 1) முதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது. அதிலும், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள மாநிலங்களில் களோபரமான சூழலே நிலவுகின்றது.
இதற்கு, கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராதமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
மேலும், போக்குவரத்துத்துறையினர் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து தீவிர வேட்டையை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், வாகன தணிக்கை மற்றும் சிறப்பு ஆய்வுகளின்மூலம் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தேடிபிடித்து அவர்களுக்கான அதிகபட்ச அபராதத்தை வழங்கி வருகின்றனர்.
இதனால், பல இடங்களில் வாகன ஓட்டி மற்றும் போலீஸார் இடையே மோதல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநில போலீஸார் செய்யாத ஓர் குற்றத்திற்காக வாகன ஓட்டி ஒருவருக்கு அதிகபட்ச அபராதத்திற்கான செல்லாணை வழாங்கியுள்ளனர். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் சர்க் டெப் (முழுபெயர் தெரியவில்லை). இவருக்கு உத்தரபிரதேச மாநில போலீஸார், மணிக்கு 144கிமீ வேகத்தில் சென்றதாக கூறி அபராதத்திற்கான செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அனுப்பி வைத்துள்ள புகைப்படத்தில் மாருதி சுஸுகி பலனோ கார் இடம்பெற்றிருக்கின்றது. ஆனால், சர்க் டெப்-இடம் பலனோ கார் இல்லை என கூறப்படுகின்றது. அவர், மாருதி சுஸுகியின் ஆல்டோ காரைப் பயன்படுத்தி வருகின்றார். இது, 9 ஆண்டுகள் பழமையானதாகும்.
ஆகையால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அவரது டுவிட்டர் பக்கத்தில், போலீஸார் அனுப்பி வைத்த புகைப்படத்தை பகிர்ந்து, தன்னிடம் மாருதிசுஸுகி ஆல்டோ கார் மட்டுமே இருப்பதாகவும், அதனை தான் 9 வருடங்களாக பயன்படுத்தி வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், உங்களால் முடிந்தால் இந்த காரை 144கிமீ வேகத்தில் ஓட்டிக் காட்டுங்கள். நான் அபராதத் தொகை ரூ. 2 ஆயிரத்தைச் செலுத்துகின்றேன் என்று சவால் விட்டுள்ளார்.
சர்க் டெப் பெற்றிருக்கும் அபராத செல்லாண் வேறொரு நபருக்கு அனுப்புவதற்கு பதிலாக, இவருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
சிசிடிவி கேமிராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு, அந்த கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தெளிவாக இல்லாததன் காரணத்தால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. இதற்கான அடுத்த நடவடிக்கை என்னவென்பது இதுவரை தெரியவில்லை.
ஏற்கனவே, செய்த தவறிற்கே பலர் அபராதம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், உபி போலீஸாரின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிக்கு மட்டுமின்றி தகவலையறிந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.