Just In
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!
ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் 10ம் தேதி வரை வழங்கப்பட்ட 1.5 லட்சம் அபராத செல்லாண்களை திரும்ப பெறும் நடவடிக்கையில் டெல்லி போலீஸ் களமிறங்கியிருப்பாதக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய திருத்தங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்றாக அதிகபட்ச அபராதம் இருக்கின்றது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதத்தை வழங்க அது வழி வகுக்கின்றது.
போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் விதமாகவும், இந்தியாவை விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கிலும் மத்திய அரசு இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து விதியை மீறியதாக வழங்கப்பட்ட 1.5 லட்சம் அபராதச் செல்லாண்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் டெல்லி போலீஸார் களமிறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில், அதிகபட்சமாக அதிவேகத்தில் சென்றதற்கான அபராத செல்லாண்களையே டெல்லி போலீஸார் ரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, டெல்லி காவல்துறை இணை ஆணையர் கூறியதாவது, "ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அக்டோபர் 10ம் தேதி வரை வழங்கப்பட்ட சுமார் 1.5 லட்சம் செல்லாண்களை டெல்லி போக்குவரத்து காவல்துறை திரும்பப் பெற இருக்கின்றது. அவற்றில் பெரும்பாலானவை தேசிய நெடுஞ்சாலை 24ல் அதிக வேகத்தில் பயணித்ததற்காக வழங்கப்பட்டவையாகும்" என்றார்.
பொதுவாக அதிவேகத்தில் பயணிப்பது என்பது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். ஆனால், டெல்லி போலீஸாரின் இந்த அபராத செல்லாண் ரத்து நடவடிக்கைக்கு ஓர் தகுந்த காரணம் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 24 என்பது டெல்லி மற்றும் உபி-யை இணைக்கும் முக்கிய சாலையாக இருக்கின்றது. இந்த சாலையில் அதிகபட்சமாக 70 கிமீ வேகம் வரை செல்லலாம் என கூறப்படுகின்றது. ஆனால், தற்போது செல்லாணைப் பெற்றிருக்கும் 1.5 லட்சம் பேரில், பலர் 60 கிமீ வேகத்திற்கும் குறைவாகவே சென்றுள்ளனர்.
இதன்காரணமாகவே, கடந்த இரண்டரை மாதங்களில் வழங்கப்பட்ட 1.5 லட்சம் அபராத செல்லாண்களை ரத்து செய்ய டெல்லி போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
பொதுமக்களில் பலர் தொடர்ச்சியாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை போலீஸார் கையாள இருக்கின்றனர்.
மேலும், அம்மாநில பொதுப்பணித்துறையும் தேசிய நெடுஞ்சாலை 24-ல் அதிகபட்சமாக 70 கிமீ வேகம் வரை பயணிக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்த தகவலை அரசு அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக இந்த சிக்கலை டெல்லி போக்குவரத்துத்துறைச் சந்தித்துள்ளது.
டெல்லி போலீஸாரின் அபராத செல்லாண் ரத்து நடவடிக்கையைத் தொடர்ந்து, நிஜாமுதீன் பாலம் மற்றும் காசிப்பூர் இடையேயான டெல்லி-உபி எல்லைக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 24 இல் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா மற்றும் வேகத்தை அளவிடும் கருவிகளில், அதிகபட்ச வேகமாக 70 கிமீ என்பது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஏற்கனவே அதி வேகத்திற்காக அபராதத்தைச் செலுத்தியவர்களுக்கான பதில் கேள்விக்குறியாக உள்ளது.
ஆகையால், முன்னதாக குற்றமே செய்யாமல் அபராதத்தைச் செலுத்திய ஓட்டுநர்கள் சிலர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
டெல்லி போலீஸாரின் அபராத செல்லாண் ரத்து நடவடிக்கை, இதுவரை அபராதத்தை செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மாறாக ஏற்கனவே அபராதத்தை வழங்கிய வாகன ஓட்டிகளுக்கு இது துளியளவும் பயனளிக்காது. அவர்கள் செலுத்திய கோடிக் கணக்கான ரூபாயும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.
இதற்கான பதிலும் டெல்லி போக்குவரத்துத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்தே, நாங்கள் குற்றம் செய்யாதவர்கள் என கூறும் வாகன ஓட்டிகள் சிலர் நீதிமன்றங்களை நாடி தங்களுக்கான நீதியைப் பெற இருக்கின்றனர்.
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?