Just In
- 7 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 23 min ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 54 min ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 5 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடேங்கப்பா... ஒரே நாளில் மெர்சிடிஸ் பென்ஸ் டெலிவரி செய்த சொகுசு கார்களின் எண்ணிக்கை தெரியுமா?
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒரே நாளில் பிரம்மிக்க வைக்கும் வகையில் சொகுசு கார்களை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது திணறி வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வாகனங்களின் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. இதற்கு இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி, பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
வாகனங்களின் விற்பனை சரிவு காரணமாக முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளன. மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு துவண்டு போயிருந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது சற்றே புது தெம்பை பெற்றுள்ளன.
இதற்கு தற்போதைய தீபாவளி பண்டிகை காலம் காரணமாக உள்ளது. பண்டிகை சமயம் என்பதால், தற்போது வாகனங்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளது என்று சொல்லலாம். தந்திராஸ் தினத்தில் ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளன.
இதன்படி ஹூண்டாய் நிறுவனம் ஒரே நாளில் 12,500 கார்களை டெலிவரி செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. அதேபோல் கியா நிறுவனம் ஒரே நாளில் 2,184 செல்டோஸ் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இந்த வரிசையில் தற்போது லக்ஸரி கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் ஒரே நாளில் பிரம்மாண்ட எண்ணிக்கையில் கார்களை டெலிவரி செய்திருக்கும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி தந்திராஸ் தினத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 600 கார்களை இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் முன்னணி லக்ஸரி கார் பிராண்டாக திகழ்கிறது.
தந்திராஸ் தினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் 600 புதிய கார்களை டெலிவரி செய்துள்ளது. இந்த 600 கார்களில், 250க்கும் மேற்பட்ட கார்கள் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
எஞ்சிய கார்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் இந்தியாவில் தற்போது மற்ற கார் நிறுவனங்களை போல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் தள்ளாடி கொண்டுதான் உள்ளது. நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 9,915 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது 11.9 சதவீத சரிவாகும். இப்படிப்பட்ட சூழலில் ஒரே நாளில் 600 கார்களை டெலிவரி செய்திருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு புது தெம்பை வழங்கியிருக்கும். இந்திய ஆட்டோமொபைல் துறை எப்போது இயல்பு நிலைக்கும் திரும்பும்? என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு