Just In
- 9 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 19 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர், போலீஸ்காரரை பழி தீர்த்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது முதல் பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
அதிலும், மிக முக்கியமாக வாகனங்களின் விலையைக் காட்டிலும் அதிகளவில் அபராதம் விதிப்பதும், அந்த உச்சபட்ச அபராதத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போலீஸார் இடையே மோதல் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகின்றது.
இந்நிலையில், பிஹார் மாநிலம், புரேனா பகுதியில் ஓர் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சீட் அணியாமல் வந்த மருத்துவரை மடக்கிய போலீஸார். அதற்கான அபராதத்தை வழங்கியுள்ளனர். அப்போது, தனக்கு அபராதத்தை வழங்கியதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்நபர், அதே பகுதியில் இருந்த மற்றுமொரு போலீஸாரை பழிக்கு பழி வாங்கியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஒரு சில மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான மாநிலங்களில் அந்த சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, ஏகபோகமான வசூலை குவித்து வருகின்றது.
வசூல் வேட்டைக்காக போலீஸார், எப்போதும் வாகன தணிக்கை என்ற யுக்தியையே தற்போது கையாண்டு வருகின்றனர். இதன்மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான உச்சபட்ச அபராதத்தை விதித்து வருகின்றனர்.
அந்தவகையில், வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றங்கள் மற்றும் விதிமீறல்களைக் கண்டறியும் விதமாக பிஹார் மாநிலத்தின், புரேனா பகுதியைச் சேர்ந்த போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர், சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கூறப்படுகின்றது.
ஆகையால், அவரை மடக்கிய போலீஸார், அவருக்கான அபராதச் செல்லாணை வழங்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
மருத்துவரும், தனது தவற்றை உணர்ந்து அபராதச் செல்லாணுக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அவரை போலீஸ் வாகனம் ஒன்று கடந்துச் சென்றது. அதில், அமர்ந்திருந்த காவலர் சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ந்துபோன அவர், உடனடியாக தனது செல்போனை எடுத்து படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
தொடர்ந்து விதியை மீறிய காவலருக்கும் அதிகபட்ச அபராதத்தை விதிக்குமாறு, தன்னை மடக்கிய போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்த போலீஸாருக்கு முதலில் அபராதத்தை விதித்துவிட்டு பின்னர் எனக்கு அபராதம் வழங்குங்கள் என கூறியுள்ளார்.
இல்லையெனில் அபராதத்தை ஏற்கமுடியாத என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சீட் பெல்ட் அணியாமல் வந்த காவலருக்கு ரூ. 1,000-த்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது. பின்னர், அந்த மருத்துவருக்கும் அதேபோன்று செல்லாண் வழங்கப்பபட்டது.
பிஹார் மாநிலத்தில் அரங்கேறிய இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் என யாராக இருந்தாலும் அதிகபட்ச அபராதத்தை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என்பதை புதிய சட்டம் வலியுறுத்துகின்றது.
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!