Just In
- 45 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 3 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அராய் சான்றுடன் பழைய கார்களை எலெக்ட்ரிக் காராக மாற்றித் தரும் இ- ட்ரியோ!
ஹைதராபாத் நகரை சேர்ந்த இ-ட்ரியோ நிறுவனம் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களாக மாற்றும் வர்த்தத்தில் ஈடுபட்டுள்ளது. பழைய செடான் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களாக மாற்றித் தருவதற்கான அங்கீகாரத்தையும் இந்நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கூட்டமைப்பு (அராய்) மற்றும் சர்வதேச ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப மையம் (ஐகேட்) ஆகியவற்றின் சான்று பெற்று இந்த புதிய வர்த்தகத்தை இ- ட்ரியோ நிறுவனம் துவங்கி இருக்கிறது.
இதன்படி, பழைய மாருதி டிசையர் கார் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார கார் மாடல்களாக மாற்றி அசத்தி இருக்கிறது. இதுபோன்ற வர்த்தகத்தில் அங்கீகாரத்துடன் வர்த்தகத்தை துவங்கி இருக்கும் முதல் நிறுவனமாக இ- ட்ரியோ பெருமை பெறுகிறது.
பழைய வாகனங்களில் அதிநவீன பேட்டரிகள், தொழில்நுட்ப வசதிகளுடன் மின்சார வாகனங்களாக மாற்றித் தருகிறது. இவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கான அனைத்து தர நிர்ணயத்துடன் மாற்றித் தருவதே இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.
மேலும், மின்சார வாகன உற்பத்தியில் புதிதாக களம் காணும் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கும் பேட்டரிகளை சப்ளை செய்வதற்கும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மின்சார வாகன தொழில்துறை மிக வேகமாக முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று இ - ட்ரியோ நம்புகிறது.
பழைய மாருதி டிசையர் மற்றும் டாடா ஏஸ் லோடு வேனை தொடர்ந்து மேலும் 15 வகையான மாடல்களை மின்சார வாகனங்களாக மாற்றித் தருவதற்கான முயற்சியிலும், அதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் இந்நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பொது சாலையில் இயக்குவதற்கான அனைத்து பாதுகாப்புத் தரத்துடன் இந்த புதிய மின்சார வாகனங்களை உருவாக்கித் தருவதாக இ- ட்ரியோ தெரிவித்துள்ளது. இந்த இரு வாகனங்களும் வர்த்தக ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், முதலில் கையில் எடுத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் வாகனங்களால் ஏற்படும் நச்சுப் புகையை குறைப்பதற்கான முயற்சிகளில் இ- ட்ரியோவின் புதிய வர்த்தகம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த வர்த்தகத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்காக பாரத்மொபி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட இருக்கிறது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!