Just In
- 36 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 50 min ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 58 min ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
மின்சார பேருந்தை சார்ஜ் செய்ய அதன் ஓட்டுநர், டீசலால் இயங்கும் ஜெனரேட்டரைப் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டின் தற்போதைய முக்கிய தேவைகளில் ஒன்றாக மின்சார வாகனங்கள் மாறியுள்ளன. இவை சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என்ற காரணத்தால், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்குமான மிகப்பெரிய தேடலாக அது மாறியுள்ளது.
எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுகலந்த புகை சுற்றுப்புறச் சூழலுக்கு சீர்கேட்டை விளைவிப்பதுடன், பலவிதமான வியாதிகள் உருவாகவும் காரணமாக அமைகின்றது.
ஆனால், மின்சார வாகனங்கள் அவ்வாறில்லாமல், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் செயல்பாட்டிற்கு நேர் எதிர்மறையாக செயல்படுகின்றன.
அந்தவகையில், சுற்றுப்புறச் சூழலுக்க நண்பனாக செயல்படுவது மட்டுமின்றி குறைந்த செலவில் அதிக பலனை அளிக்கும் திறனை அவை பெற்றிருக்கின்றன. இதுபோன்ற பல காரணங்களால் மின்சார வாகனங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், மின்சார பேருந்து ஒன்று டீசலால் இயங்கும் ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி, வைரலாகி வருகின்றது.
பொதுவாக, மின்சார வாகனங்கள் குறைந்த பராமரிப்பு செலவில் அதிகம் பலனளிப்பதாலும், பூஜ்ஜியம் உமிழ்வை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்ற காரணத்தினாலுமே, அவற்றின் விற்பனையை ஊக்குவிக்கின்ற வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால், இங்கு ஓர் மின்சார பேருந்து, அதிக மாசை வெளிப்படுத்தும் டீசல் ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் முழுமையாக சார்ஜ் தீர்ந்துவிட்ட காரணத்தால், அதனை மீண்டும் இயக்கும் நோக்கில், அப்பேருந்தின் ஓட்டுநர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஓட்டுநரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் வசைபாடிய வண்ணம் இருக்கின்றனர். ஆனால், போதியளவு மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், இந்தியாவில் மின்சார வாகனங்குளுக்கான சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை இருப்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் இன்றளவும் சென்று சேரவில்லை. இதற்கு முக்கிய காரணமாக மின்வாகனங்களின் அதிக விலை இருந்தாலும், அதற்கு அடுத்தபடியாக சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை இருக்கின்றது.
தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் அந்த வீடியோவை, ஹிமன்சு பலிவல் என்ற டுவிட்டர் பயனர் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அரங்கேறியுள்ளது. மேலும், ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யப்பட்ட மின்சாரப் பேருந்து பிஎம்சி-க்கு சொந்தமானது என அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
|
தொடர்ந்து, மின்சாரப் பேருந்தின் இந்த நிலைக்கு கவலைத் தெரிவிக்கும் விதமாக அந்த பதிவில் அவரது வருத்தத்தையும் பதிவிட்டுள்ளார்.
அந்தவகையில், "மின்சார பேருந்தை சார்ஜ் செய்ய சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி, பின்னர் சுற்றுப்புறத்தை பாதுகாக்க மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்த போகிறீர்களா?... என கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவில் இன்னும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் முழுமையாக வந்தடையாத காரணத்தால், பல நிறுவனங்கள் அதன் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன.
அண்மையில் மாருதி சுஸுகி நிறுவனம், அதன் மின்சார வாகனங்களின் அறிமுகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கா காரணத்தை வெளியிட்டிருந்தது. அதில், சார்ஜிங் நிலையம் இல்லாததும் ஓர் காரணமாகும்.
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!