Just In
- 8 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 56 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து
உலகில் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் மார்கெட்டை கொண்டது இந்தியா. உலகில் அதிகளவில் மாசு உண்டாக்கும் நகரங்களில் 15 நகரங்கள் நம் இந்தியாவில் தான் உள்ளன. இதில் வாகனங்களால் ஏற்படும் மாசுவை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்கள் தான் ஒரே வழி என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் 1000 பேரில் 19 நபர்கள் காரை உபயோக்கின்றனர் என ஆய்வறிக்கை கூறுகிறது. இது குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் நம் நாட்டில் வாகன நெரிசல், 4 வினாடிகளுக்கு ஒரு வாகன விபத்து போன்றவை பெரும் தலைவலியாக உள்ளது.
ஒரு நாட்டின் போக்குவரத்து மாசு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் வாகனத்தின் டிசைன்ஸ் பிரிவு மிக முக்கிய பங்கை வகிக்கிறது என டாடா மோட்டார்ஸின் டிசைன்ஸ் பிரிவின் முதன்மை அதிகாரி Mr.ப்ரதாப் போஸ் கூறியுள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்தும் இலகுவான மெட்டிரீயல்ஸ், கார்ப்பிரேட் அல்லாத காற்று இயக்கவியல் முறைகள் மற்றும் க்ரியேடிங் டிசைன்ஸ் போன்றவை மறுசுழற்சிக்கு உதவுகிறது.
மேலும் டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற என்ஜின்களை பயன்படுத்தவும் முயற்சித்து வருகிறது. இந்த குறிக்கோள்களினால் இந்நிறுவனத்திடம் இருந்து டிகோர் இவி எலக்ட்ரிக் கார் சமீபத்தில் சந்தைக்கு வந்தது. மேலும் அகமதாபாத் நகர அரசுடன் 300 எலக்ட்ரிக் பேருந்துகளை தயார் செய்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
இந்த பசுமை வாகனங்கள் விலையுயர்ந்ததாக இருந்தாலும் இவை காற்று மாசு உள்ளிட்ட எந்த மாசுவையும் ஏற்படுத்தாத, சர்வீஸ் மெயிண்டனன்ஸுக்கும் எந்தவொரு பண செலவையும் உண்டாக்காத வாகனமாக இருக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது.
உலகளவில் குறைந்த விலையில் விற்பனையாகும் எலக்ட்ரிக் வாகனத்தின் விலையே சுமார் 21 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் டாடா நிறுவனம் இத்தகைய வாகனங்களை மலிவான விலையில் அதேநேரம் நீண்ட காலம் நன்மை தராத வகையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விலையுயர்ந்த எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் டயர், ப்ரேக்குகளை மலிவான பாகங்களால் மாற்றவுள்ளது.
டாடா நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு இந்திய ஆட்டோமொபைல் மார்கெட் எந்த வகையில் நன்மை தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் டாடா நிறுவனம் குறைந்த விலையில் அதற்கு ஏற்ற தரத்துடைய எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் அவர்களிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே ஆட்டோமொபைல் தொழில் சார்ந்த டிசைனர்ஸ் உள்ளனர். இதனால் டாடா நிறுவனம் தங்களது கார்களின் டிசைன் விஷயத்தில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தினால் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் புதிய சாதனை புரியலாம்.
டாடா நிறுவனத்தின் இந்த எல்க்ட்ரிக் வாகனங்கள் பற்றிய ஆர்வம் நிச்சயமாக தினந்தினம் அதிகரித்து வரும் மாசுப்படுத்தலை குறைப்பதற்காக தான் இருக்கும். ஆனால் டாடா நிறுவனம் கூறும் எலக்ட்ரிக் வாகனங்களால் விபத்துகளை குறைக்க முடியும் என்கிற கூற்று தான் சற்றும் விளங்கவில்லை. இதையெல்லாம் விட டாடா நிறுவனம் கவனிக்க வேண்டிய விஷயம், இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உபயோகிக்கும் வாகனத்தில் இருந்து எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறுவதற்கு பெரியளவில் யோசிப்பார்கள் என்பது தான்.
விலையும் வருடங்கள் செல்ல செல்ல குறையும் என வைத்து கொண்டாலும், வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் உள்கட்டமைப்பு எலக்ட்ரிக் கார்களில் அவ்வளவாக இல்லை. சரி இயந்திர பிரிவிலாவது எதாவது ஒரு நன்மை உள்ளதா என பார்த்தால், ஒரு நாளில் 30 கிலோமீட்டர் செல்லும் இந்த காரை 40 கிமீ/நேரத்தில் ஓட்டி செல்ல கண்டிப்பாக யாரும் விரும்பமாட்டார்கள்.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி