Just In
- 2 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 4 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 9 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 11 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
Don't Miss!
- News சென்னைக்கு நிகராக.. ஓசூர், பெருந்துறை, கோவை, தூத்துக்குடியில் நடக்கும் சம்பவம்.. மாஸ் தொழிற்புரட்சி
- Finance குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம்.. டிக்டாக்-ஐ தடை செய்த அடுத்த முக்கிய நாடு..!
- Lifestyle சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
- Movies பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்?.. அவரே கொடுத்த தரமான பதிலடி
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...
பிரதமர் மோடியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் விலை அவ்வப்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து, வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி வருகிறது. தற்போது கூட அமெரிக்கா-ஈரான் இடையேயான பிரச்னை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழ்நிலையிலும், இந்தியாவில் இன்னும் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், வாகன ஓட்டிகளில் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. சரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வே இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.
நிச்சயமாக இதற்கு மாற்று இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைக்கு முடிவு கட்டலாம். எனவே மத்திய அரசும் கூட இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பல்வேறு வழிகளில் ஊக்குவித்து வருகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாயில் கணிசமான தொகை மிச்சம் பிடிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும், சுற்றுச்சூழல் மேம்படும் உள்ளிட்ட காரணங்களாலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
இந்திய சாலைகளில் இயங்கும் மொத்த வாகனங்களில், குறைந்தபட்சம் 25 சதவீத வாகனங்களாவது, வரும் 2030ம் ஆண்டிற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா II திட்டத்திற்காக சமீபத்தில் மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்படுகிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது எளிதாகும்.
அத்துடன் நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இஇஎஸ்எல் (EESL - Energy Efficiency Services Limited) பொறுப்பேற்று கொண்டுள்ளது.
முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் ஃபாஸ்ட் சார்ஜர்கள் (Fast Chargers) நிறுவப்படவுள்ளன. இதன்பின் எலெக்ட்ரிக் கார்கள் பயன்படுத்தப்படும் அரசு அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.
இதுதவிர பொது பார்க்கிங் இடங்களிலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வேகமாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக்குவது பிரதமர் மோடியின் கனவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகன துறையில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என விரும்புவதாக அவர் சமீபத்தில் கூறினார்.
இந்த சூழலில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் 7 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை இஇஎஸ்எல் தற்போது இன்ஸ்டால் செய்துள்ளது. 4 ஸ்லோ மற்றும் 3 ஃபாஸ்ட் சார்ஜர்கள் என மொத்தம் 7 சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டுள்ளன.
|
பாராளுமன்ற மக்களவையின் செயலாளர் சினேஹ்லதா ஸ்ரீவத்சவா (Snehlata Shrivastava) இதனை திறந்து வைத்தார். அத்துடன் 10 புதிய எலெக்ட்ரிக் கார்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவை டாடா டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா இ-வெரிட்டோ கார்கள் ஆகும்.
இஇஎஸ்எல் டெண்டரின் ஒரு பகுதியாக இந்த கார்கள் சமீபத்தில்தான் அரசுக்கு சப்ளை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இஇஎஸ்எல் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதேபோல் நாடு முழுக்க சார்ஜிங் ஸ்டேஷன்களை வேகமாக நிறுவினால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் ஒதுக்குகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
-
140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!