Just In
- 23 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு!
ஆட்டோமொபைல் துறையை சரிவிலிருந்து மீட்பதற்கான புதிய திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று அறிவித்துள்ளார்.
வாகன விற்பனை கடும் சரிவு
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி வெகுவாக குறைந்து வருகின்றது. கார் மற்றும் பைக் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதையடுத்து, இந்த துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் பறி போக துவங்கியுள்ளன. பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.
புதிய விதிகளால் சுணக்கம்
மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை ஆட்டோமொபைல் துறையை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக கருத்துக்கள் மேலோங்கின. இதில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
பொருளாதார மந்த நிலை
ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பாகவே பேசப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
முக்கிய அறிவிப்புகள்
அப்போது, பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதற்கான சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறைக்காக பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
புதிய பதிவுக் கட்டண முறை
அதன்படி, புதிய வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அந்த திட்டத்தை வரும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திப்போடுவதற்கு முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் வாகனத் தடை?
எலெக்ட்ரிக் வாகனங்களை போலவே, பெட்ரோல், டீசல் வாகனங்கள் தொடர்ந்து பதிவு செய்யப்படும். இதில் எந்த குழப்பமும் இல்லை என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.
முழுமையான ஆயுட்காலம்
அடுத்த ஆண்டு மார்ச் வரை இருந்த வாங்கப்படும் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தர கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படும் ஆண்டுகள் வரை முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் பிஎஸ்-4 வாகனங்கள் தடை செய்யப்படலாம் என்ற அச்சமும் இதன் மூலமாக நீங்கி இருக்கிறது.
பழைய வாகன ஒழிப்பு திட்டம்!
மேலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேலான கார்களை ஒழிப்பதற்கான புதிய திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஒழிக்க வேண்டும் என்று கார் நிறுவனங்கள் மிக நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. எனவே, இந்த திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இதனால், புதிய வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்.
அரசுத் துறைகளுக்கு புதிய வாகனங்கள்
அடுத்து, அரசுத் துறைகளுக்கான பயன்பாட்டிற்காக புதிய கார்கள் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்குவதற்கு அரசுத் துறைகளிலிருந்து புதிய ஆர்டர்களை கார் நிறுவனங்கள் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாகனக் கடன் வட்டி குறைப்பு
வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், கார் வாங்குவோரை கவர்ந்து இழுக்கும் வாய்ப்பை நிறுவனங்கள் பெற முடியும். மொத்தத்தில், இந்த புதிய அறிவிப்புகள் வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!