Just In
- 3 min ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 1 hr ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 1 hr ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- 2 hrs ago என்ன மேடம்... ஹர்பஜன் சிங் மாதிரி இருக்கீங்க!! விசித்திரமான கெட்-அப்பில் ஸ்கூட்டரில் சென்ற பெண் - வீடியோ!
Don't Miss!
- Finance தங்கம் இறக்குமதியில் தடாலடி சரிவு.. மக்களின் முடிவால் நகை கடைக்காரர்கள் சோகம்..!!
- News ரூ.10 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆட்டோ டிரைவர்.. கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு
- Technology ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Movies சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா!
இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு வெகுமதி கிடைக்கும் விதமாக அதன் விற்பனைக் கணிசமாக அதிகரித்து இருப்பதாக டாட நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், பட்ஜெட் ரக கார் தயாரிப்பில் முன்னணி வகித்து வருகின்றது. இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல் காரை குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு கிராஷ் (Crash) டெஸ்ட் செய்தது. இந்த பரிசோதனையில், நெக்ஸான் கார் ஐந்துக்கு 5 ஸ்டார் பெற்று இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைப் பெற்றது.
இந்த காரை 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் கிராஷ் டெஸ்ட் செய்தபோது, 4 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றது. இதைத்தொடர்ந்து, நெக்ஸான் காரில் சில மாற்றங்களை டாடா நிறுவனம் செய்தது. அதன்படி, நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களிலும், முன்பக்க டிரைவர் மட்டும் பாஸஞ்சர் சீட்பெல்ட் ரிமைண்டர் பொருத்துவதைக் கட்டாயமாக்கியது.
டாடாவின் இந்த முயற்சியினாலே நெக்ஸான் இந்த புதிய தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த கிராஷ் டெஸ்டில் 17 புள்ளிகளுக்கு 16.06 என்ற புள்ளிகளை எடுத்து நெக்ஸான் கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட சோதனையில் 13.56 புள்ளிகளை மட்டுமே இது பெற்றிருந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட சோதனையில் டாடா நெக்ஸான் காரின் கூடு அமைப்பு வலிமையானதாக இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அத்துடன், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களிலும் நல்ல மதிப்பீட்டை இந்த நெக்ஸான் பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் அதிகபட்சமான 5 ஸ்டார் ரேட்டிங்கை இந்த கார் பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து டாடா நெக்ஸான் எஸ்யூவிகள் கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
டாடாவின் இந்த வெற்றிக்கு பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவ்வாறு, குளோபல் என்சிஏபி அமைப்பின் பொதுச் செயலாளர் டேவிட் வார்டு, "பெரியவர்களின் பாதுகாப்பில் இந்த கார் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளது. இது இந்திய கார்களின் பாதுகாப்பில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதற்கு என்னுடையை வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.
டாடாவின் இந்த சாதனையைத் தொடர்ந்து, நெக்ஸான் எஸ்யூவி மாடலின் விற்பனைக் கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 53 ஆயிரத்து 797 நெக்ஸான் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது முந்தைய விற்பனையைக் காட்டிலும் 20 சதவீத அதிக வளர்ச்சியாகும். இதில், அதிகபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 5 ஆயிரத்து 623 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
விற்பனைக் குறித்த முழுவிவர பட்டியலைக் கீழே காணலாம்:
Month | Units Sold |
March 2018 | 4,405 |
April 2018 | 4,717 |
May 2018 | 4,308 |
June 2018 | 4,148 |
July 2018 | 3,840 |
August 2018 | 4,499 |
September 2018 | 4,297 |
October 2018 | 4,608 |
November 2018 | 4,224 |
December 2018 | 4,393 |
January 2019 | 5,095 |
February 2019 | 5,263 |
Total | 53,797 |
இவ்வாறு, இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைக் கொண்ட டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி மாடலுக்கு மக்கள் நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளனர்.
டாடா நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களிலும் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரிக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நெக்ஸானின் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் ஆகிய இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்டுகள் கொடுக்கப்படுகின்றன.
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!