Just In
- 35 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, சிறப்புத் திட்டங்களை அறிவித்து அசத்தி உள்ளது ஃபோர்டு கார் நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப கார்களில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. இதுபோன்று மாற்றங்களை செய்தால், கார் நிறுவனங்கள் வழங்கும் வாரண்டி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மாற்றம் செய்யப்பட்ட கார்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தாலும், வாரண்டி விதிகளில் சிக்கல் நிலவுகிறது. இதனை மனதில் வைத்து, மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் திட்டத்தை ஃபோர்டு அறிவித்துள்ளது.
அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றங்களை செய்வதற்கு வெளியில் உள்ள நிறுவனங்கள் உதவியுடன் மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்கள் தங்களது கார்களில் மாற்றங்களை செய்யலாம். அதற்கு நிறுவனத்தின் வாரண்டி வழங்கப்படும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு வரியிலும், வாகனத்திற்கான காப்பீட்டு தொகையிலும் குறிப்பிட்ட தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு அரசு சிறப்புச் சலுகை திட்டங்களுக்கான ஆவணங்களை சமர்பிப்பதற்கு தேவையான உதவிகளை பணியாளர்கள் மூலமாக செய்து கொடுக்கப்படும்.
இதுமட்டுமல்லாது, மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வட்டி விகிதத்தில் கார் கடன் பெற்றுத் தருவதற்கும் ஏற்பாடு செய்வதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களை மனம் குளிர செய்துள்ளது.
கடும் சந்தைப் போட்டியை மனதில் வைத்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஃபோர்டு அறிவித்து வருகிறது. அண்மையில் சர்வீஸ் செய்வதற்கான செலவை கணக்கிடும் வகையில் கால்குலேட்டர் ஒன்றை அறிமுகம் செய்தது. இதில், உதிரிபாகங்கள் விலை மற்றும் சர்வீஸ் கட்டணங்களை ஒளிவுமறைவின்றி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பை கொடுத்தது.
அத்துடன், ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களுக்கு 5 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டியையும் அறிவித்தது. இந்த நிலையில், தற்போது மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கவும், சிறப்புச் சேமிப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!