Just In
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 5 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!
ஃபோர்டு - மஹிந்திரா இரு நிறுவனங்களின் இணைப்பைத் தொடர்ந்து வெளிவரும் முதல் எலக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் காருக்கான எஞ்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டும், இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் கடந்த 2017ம் ஆண்டு கூட்டணி அமைத்தன. புதிய கார்களை உருவாக்கவும், புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து மஹிந்திராவின் வெற்றிகமான எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி500 அடிப்படையில், புதிய கார் ஒன்றை உருவாக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பிற்கு பின், முதல் முறையாக செடான் ரகத்திலான ஃபோர்டு ஆஸ்பயர் எலக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா என்னும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்பயர் எளக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்கான எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, ஆஸ்பயர் எலக்ட்ரிக் காரில் 82 பிஎச்பி திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு அதீதி சக்தியை வழங்கும் வகையில் 25kWh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை செல்லலாம். அதேசமயம், இது அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய திறனைப் பெற்றுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்யவும் திட்டம் தீட்டி வருகின்றது. அதேசமயம், தற்போது தயாராகி வரும் ஆஸ்பயர் எலக்ட்ரிக் கார்கள், ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நிறுவனங்களின் இணைப்பில் தயாராகி வரும் இந்த புதிய மாடல் ஆஸ்பயர் எலக்ட்ரிக் கார் பெரிய பூட் ரூம் மற்றும் நீளமான வீல் பேஸினைப் பெற்ற மாடலாக உருவாகியுள்ளது. அதேபோன்று, மற்ற எலக்ட்ரிக் கார்களுக்கு டஃபான போட்டி கொடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டு உருவாகியுள்ளது.
மின் வாகனங்களுக்கான விதிகள் இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால், இந்த எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் சற்று தள்ளிப்போடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆஸ்பயர் எலக்ட்ரிக் கார் வருகின்ற 2020ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.