Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பல முறை சாலையில் உருண்ட ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்: சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துவந்த ஓட்டுநர்..
கோரமான விபத்தைச் சந்தித்த ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோ ஸ்போர்டு கார், அதன் உரிமையாளரை சிறு காயங்களுடன் பாதுகாத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சி ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு விபத்தின் காரணமாக சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இறப்பதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு, வாகன ஓட்டிகள் மட்டுமே காரணமா... என்றால், இல்லவே இல்லை என்றுதான் பலர் கூறுவார்கள். ஆம்... நாங்களும் அதையேதான் கூறுகின்றோம்.
இதனை உறுதி செய்யும் வகையில், முன்னதாக நாட்டில் பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஏனென்றால், இந்தியாவில் உள்ள பல முக்கிய சாலைகள் மிக மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன. அதிலும், சில வழித்தடங்கள் அதிக ஆபத்து நிறைந்தவைகளாகவும் இருக்கின்றன.
இதன்காரணமாக, இந்தியச் சாலையில் நிகழும் விபத்து சம்பவங்கள் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் உருக்குலைந்து, பள்ளம் மேடுகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. அதேசமயம், சாலைகளில் எப்போது எது வரும் என்பதையே யாராலும் கணிக்க முடியாது.
அதிலும், மிக முக்கியமாக விலங்குகள், ஜே வால்கர்ஸ் எனப்படும் பாதசாரிகள் இவர்கள் எப்போது சாலைகளைக் கடப்பார்கள் என்றே நமக்கு தெரியாது. இதன்காரணமாகவே, நாட்டில் பல விபத்து தினம் தினம் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் ஈகோ ஸ்போர்ட் கார் ஒன்று, சாலை விபத்தில் சிக்கி, பலமுறை உருண்டு செல்வதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த காட்சிகள் அனைத்தும், சாலையோரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள்தான் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகின்றது.
இணையத்தில், பல விபத்துகாட்சிகள் இருந்தும், தற்போது விபத்தைச் சந்தித்தித்திருக்கும் ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரின் விபத்து காட்சிகள் மிக அதிகமாக வைரலாகி வருகின்றது. இதற்கு, அந்த கார் பல முறை உருண்டு சாலையில் சென்ற பின்னரும், அதில் இருந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் அசால்டாக வெளியே நடந்துச் செல்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த வீடியோக் காட்சியை முதலில் பார்க்கும் எவரும் திகிலடையத்தான் செய்வார்கள். ஏனென்றால், இந்த கார் அந்த அளவிற்கு கோரமான விபத்தைச் சந்திக்கின்றது. அதுமட்டுமின்றி, பல முறை உருண்ட அந்த கார், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை, அப்படியே விழுங்கியவாறு, நசுக்கிவிட்டு அதன்மீது அமர்கின்றது.
இதுகுறித்த வீடியோக் காட்சியை நீங்கள் கீழே காணலாம்...
இத்தகைய காட்சியால், பார்ப்போர் அனைவரும், காரில் இருந்தவர்கள் மிகப்பெரிய பின்விளைவைச் சந்தித்திருப்பார்கள் என எண்ணியிருந்தனர். ஆனால், அந்தவேலையில் காரின் ஓட்டுநர், சாதாரண சிறு சிறு காயங்களுடன் வெளியேறி நடந்துச் சென்றார். இதைக் கண்ட பின்னரே அங்கிருந்தவர்கள் மனம் குளிர்ந்தனர்.
இந்த கார் விபத்துக்குள்ளாகிய அந்நேரத்தில் அப்பகுதியில் மழைப் பெய்ததாகக் கூறப்படுகின்றது. வீடியோவிலும் அதற்கான சான்றுகள் தெரிகின்றன.
இத்தகைய சூழலில், அதிகவேகமாக வந்த ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட், நிறுத்தத்தின்போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தைச் சந்தித்திருப்பதாக, அதனை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.
அதேசமயம், விபத்தில் ஓட்டுநர் பெரிய காயங்களின்றி, சிறு சிறு காயத்துடன் வெளியேறியதைக் கண்டு வியப்புற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயணியின் இந்த பாதுகாப்பிற்கு ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் காரின் மிகுந்த உறுதித் தன்மையே முக்கிய காரணமாக இருக்கின்றது.
விபத்தில் சிக்கியுள்ள இந்த ஃபோர்டு ஈகோ ஸ்போர்டு எஸ்யூவின் ட்ரிம் மாடல் குறித்த தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், இதன் டாப் ஸெப்க் மாடலில் பாதுகாப்பு அம்சங்களாக, 6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை, ஓட்டுநர் மற்றும் பயணிகளின் அதீத பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
ஃபோர்டு நிறுவனத்தின் பழைய எஸ்யூவி மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இது சப்-4-மீட்டர் ரக எஸ்யூவி ரக காராகும். இந்த காரில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் சக்தி வாய்ந்த எஞ்ஜின், மிகச் சிறந்த டைனமிக் தோற்றம் மற்றும் உயர் ரகத்திலான கட்டமைப்பு ஆகியவைக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை போன்று டெஸ்லா மாடல் எக்ஸ் காரும் உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளை கொண்டது. இதை நிரூபிக்கும் வகையில், விபத்து ஒன்றில் டெஸ்லா மாடல் எக்ஸ் கார் இரு துண்டுகளாக பிளந்தது. ஆனால் அதன் டிரைவர் தூசியை தட்டி விட்டு அசால்டாக வெளியே நடந்து வந்தார். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரும்பாலான விபத்துக்களுக்கு வாகனங்களை ஓட்டுபவர்கள் செய்யும் தவறுகளே முக்கியமான காரணமாக உள்ளது. தாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால் விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பறிபோவதை ஒரு சிலர் உணர்வதே கிடையாது.
உலகில் தினமும் பல்வேறு சாலை விபத்துக்கள் நடைபெற்றாலும் கூட, ஒரு சில சாலை விபத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சாலை விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அதிர்ஷ்டவசமாக இந்த சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
அப்படி இருந்தும் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்த காரணம் உள்ளது. இந்த விபத்தில் சிக்கிய கார் இரண்டு துண்டாக உடைந்து நொறுங்கியுள்ளது. அதுவும் உடைந்து நொறுங்கியது டெஸ்லா நிறுவனத்தின் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பது டெஸ்லா மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tesla Model X Electric SUV) கார் ஆகும்.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றுதான் மாடல் எக்ஸ். இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஆகும். நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார் (Nissan GT-R Supercar) மோதியதால், ஒரு டெஸ்லா மாடல் எக்ஸ் இரண்டாக நொறுங்கியுள்ளது.
இந்த விபத்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. வெள்ளை நிற நிஸான் ஜிடி-ஆர் கார் மோதியதால், டெஸ்லா மாடல் எக்ஸ் இரண்டு துண்டுகளாக நொறுங்கியுள்ளது. ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் காரை ஓட்டி வந்தவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான்.
ஆனால் நிஸான் ஜிடி-ஆர் காரில் வந்தவர்கள் காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்லா மாடல் எக்ஸ் காரை ஓட்டி வந்தவரின் பெயர் ஜோஸ் டியாஸ் என கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு காலில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிஸான் ஜிடி-ஆர் காரில் இரண்டு பேர் வந்துள்ளனர்.
அவர்கள் இருவருமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஸான் ஜிடி-ஆர் கார் அதிவேகத்தில் வந்ததே இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை விளக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
உலகில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகமே முக்கியமான காரணமாக உள்ளது. இதுதவிர குடிபோதையில் வாகனங்களை இயக்குவதாலும் ஏராளமான விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே இந்த 2 தவறுகளையும் செய்யும் வாகன ஓட்டிகள் மீது அனைத்து நாடுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருந்தபோதும் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனக்கூறி, கடும் எதிர்ப்புகளையும் மீறி புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்