Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டிரைவர்லெஸ், எலெக்ட்ரிக் கார்களை இணைந்து தயாரிக்க ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் இடையே கூட்டணி!
வரும் 2023ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை ஃபோர்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள தனது ஆலையிலேயே இந்த புதிய எலெக
டிரைவர்லெஸ் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமமும் இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
கடுமையான மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை மனதில் வைத்து எலெக்ட்ரிக் கார் உருவாக்கத்திற்கு வாகன நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
குறிப்பாக, டிரைவர்லெஸ் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு பெரும் முதலீடு தேவைப்படுவதால் உருவாக்கப் பணிகள் போதிய வேகத்தில் நடக்கவில்லை. இதனை மனதில் வைத்து பல்வேறு வாகன நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட துவங்கி இருக்கின்றன.
அந்த வகையில், உலகின் மாபெரும் வாகன உற்பத்தி குழுமமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஃபோர்டு நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான MEB பிளாட்ஃபார்மை பயன்படுத்தி புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
வரும் 2023ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை ஃபோர்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள தனது ஆலையிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
மேலும், 6 ஆண்டு காலத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவும் ஃபோர்டு இலக்கு வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடலையும் களமிறக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஆனால், எந்த வகையிலான காராக இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
புதிய எலெக்ட்ரிக் காருக்கு தேவையான கட்டமைப்பு கொள்கை மற்றும் உதிரிபாகங்களை ஃபோர்டு நிறுவனத்திற்கு ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கிறது. இதன்மூலமாக, மிக விரைவாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கும், இரு நிறுவனங்களின் முதலீடு வெகுவாக குறையும் என்பதால், சரியான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக ஃபோர்டு மற்றும் ஃபோக்ஸ்வேகன் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுதவிர, டிரைவர்லெஸ் கார் உருவாக்கத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த அர்கோ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அர்கோ நிறுவனத்தில் ஃபோர்டு முதலீடு செய்து வருகிறது.
இந்த நிலையில், இரு நிறுவனங்களும் சமமான பங்குகளை பெறும் விதத்தில் இந்த முதலீடு அமைய உள்ளது. இரு நிறுவனங்களின் டிரைவர்லெஸ் வாகனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அர்கோ நிறுவனம் வழங்க உள்ளது. லெவல் -4 என்ற உயர் நிலை டிரைவர்லெஸ் தொழில்நுட்பத்தை அர்கோ நிறுவனம் உருவாக்கித் தர இருக்கிறது..
முதல்கட்டமாக அர்கோ நிறுவனத்தின் டிரைவர்லெஸ் வாகன தொழில்நுட்பம் வர்த்தக வாகனங்களிலும், நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் டோர் டெலிவிரி செய்யும் வாகனங்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், டிரைவர்லெஸ் கார்களிலும் அர்கோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
மேலும், ஃபோர்டு நிறுவனம் தயாரிக்கும் புதிய பிக்கப் டிரக் வாகனத்தை இரு பிராண்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டம் உள்ளது. வரும் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய பிக்கப் டிரக் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!