Just In
- 1 hr ago எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- 2 hrs ago ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- 4 hrs ago உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- 9 hrs ago பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
Don't Miss!
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Movies செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
- News மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்? முக்கிய ஆதாரங்களை வெளியிடும் அரவிந்த் கெஜ்ரிவால்! EDக்கு டிவிஸ்ட்
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
டிரைவர்லெஸ், எலெக்ட்ரிக் கார்களை இணைந்து தயாரிக்க ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் இடையே கூட்டணி!
வரும் 2023ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை ஃபோர்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள தனது ஆலையிலேயே இந்த புதிய எலெக
டிரைவர்லெஸ் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமமும் இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
கடுமையான மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை மனதில் வைத்து எலெக்ட்ரிக் கார் உருவாக்கத்திற்கு வாகன நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
குறிப்பாக, டிரைவர்லெஸ் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு பெரும் முதலீடு தேவைப்படுவதால் உருவாக்கப் பணிகள் போதிய வேகத்தில் நடக்கவில்லை. இதனை மனதில் வைத்து பல்வேறு வாகன நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட துவங்கி இருக்கின்றன.
அந்த வகையில், உலகின் மாபெரும் வாகன உற்பத்தி குழுமமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஃபோர்டு நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான MEB பிளாட்ஃபார்மை பயன்படுத்தி புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
வரும் 2023ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை ஃபோர்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள தனது ஆலையிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.
மேலும், 6 ஆண்டு காலத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவும் ஃபோர்டு இலக்கு வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடலையும் களமிறக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஆனால், எந்த வகையிலான காராக இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
புதிய எலெக்ட்ரிக் காருக்கு தேவையான கட்டமைப்பு கொள்கை மற்றும் உதிரிபாகங்களை ஃபோர்டு நிறுவனத்திற்கு ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கிறது. இதன்மூலமாக, மிக விரைவாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கும், இரு நிறுவனங்களின் முதலீடு வெகுவாக குறையும் என்பதால், சரியான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக ஃபோர்டு மற்றும் ஃபோக்ஸ்வேகன் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுதவிர, டிரைவர்லெஸ் கார் உருவாக்கத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த அர்கோ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அர்கோ நிறுவனத்தில் ஃபோர்டு முதலீடு செய்து வருகிறது.
இந்த நிலையில், இரு நிறுவனங்களும் சமமான பங்குகளை பெறும் விதத்தில் இந்த முதலீடு அமைய உள்ளது. இரு நிறுவனங்களின் டிரைவர்லெஸ் வாகனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அர்கோ நிறுவனம் வழங்க உள்ளது. லெவல் -4 என்ற உயர் நிலை டிரைவர்லெஸ் தொழில்நுட்பத்தை அர்கோ நிறுவனம் உருவாக்கித் தர இருக்கிறது..
முதல்கட்டமாக அர்கோ நிறுவனத்தின் டிரைவர்லெஸ் வாகன தொழில்நுட்பம் வர்த்தக வாகனங்களிலும், நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் டோர் டெலிவிரி செய்யும் வாகனங்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், டிரைவர்லெஸ் கார்களிலும் அர்கோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
மேலும், ஃபோர்டு நிறுவனம் தயாரிக்கும் புதிய பிக்கப் டிரக் வாகனத்தை இரு பிராண்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டம் உள்ளது. வரும் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய பிக்கப் டிரக் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்
-
குடும்பத்தோட ஜாலியா டூர் போகலாம்! கம்மி ரேட்ல விற்பனைக்கு வரப்போகும் மாருதியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்!