Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 5 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Movies குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஸ்ரீதிவ்யா.. ஓரம் கட்டிய தமிழ் சினிமா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக் நியூஸ்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
இந்தியாவில் மஹிந்திராவுடன் இணையும் ஃபோர்டு கார் நிறுவனம்!
இந்தியாவில் கார் வர்த்தகத்தை மஹிந்திராவுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் கடந்த 1995ம் ஆண்டு இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. ஃபோர்டு கார் குழுமத்தின் கீழ் தனி நிறுவனமாக இந்தியாவில் கார் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையிலும், குஜராத் மாநிலத்திலும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. உள்நாட்டு தேவை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் இங்கு உற்பத்தியாகும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் மிக நீண்ட காலமாக கார் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும், எதிர்பார்த்த அளவு வர்த்தகம் சிறப்பாக இல்லை. வெறும் 3 சதவீத சந்தை பங்களிப்பை மட்டுமே ஃபோர்டு தக்க வைத்து வருகிறது.
இதையடுத்து, இந்தியாவில் நேரடி வர்த்தகத்தை கைவிட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனமாக இந்திய வர்த்தகத்தை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மஹிந்திரா போர்டு என்ற பெயரில் புதிய நிறுவனம் செயல்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கூட்டு நிறுவனத்தில் ஃபோர்டு நிறுவனம் 49 சதவீத பங்குகளையும், மஹிந்திரா 51 சதவீத பங்குகளையும் கைவசப்படுத்த உள்ளன. இந்த கூட்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் வாரியத்தில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு நேரடி உரிமைகளை ஃபோர்டு கைவசம் வைத்திருக்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில் உள்ள இரண்டு கார் ஆலைகள் உள்ளிட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மஹிந்திரா ஃபோர்டு கூட்டு நிறுவனம் வசம் செல்ல இருக்கிறது. எனினும், எஞ்சின் உற்பத்தி ஆலை உள்ளிட்ட சில சொத்துக்களை தன் கையில் நேரடியாக வைத்துக் கொள்ள ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
புதிய கார்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எஞ்சின் உருவாக்கப் பணிகளுக்காக கடந்த 2017ம் ஆண்டு மஹிந்திராவுடன் ஃபோர்டு நிறுவனம் கூட்டணி அமைத்தது. இதன்மூலமாக, இரு நிறுவனங்களும் பலன் பெறும் என்ற நிலை உருவானது. முதலீடுகளை குறைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் நேரடி வர்த்கத்திலிருந்து ஃபோர்டு விலக முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை கைவிட்டது. செவர்லே பிராண்டில் கார் விற்பனை மற்றும் உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு டாடா காட்டியது. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனமும் நேரடி வர்த்தகத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Bloomberg
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!