அடுத்த மாதம் முதல் இந்த டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக பயணிக்க புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகள் மிகவும் முக்கியமானது. விரைவான போக்குவரத்திற்கு உதவி செய்யும் தரமான சாலை வசதிகளை கொண்டிருக்கும் நாடுகளால் மட்டுமே, பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ச்சியடைய முடியும்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

இதனை மனதில் வைத்துதான் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது ஆட்சி செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் கூட தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் தேசிய நெடுஞ்சாலை பணிகள் வேகம் எடுத்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் கிடப்பில் கிடந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முடுக்கி விட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

இது அவசியமான நடவடிக்கைதான் என்ற போதிலும், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டி வீசப்படுவதாகவும், கனிம வளங்கள் சூறையாடப்படுவதாகவும் புகார்கள் உள்ளன. சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு கிளம்பிய எதிர்ப்பு இதற்கு ஓர் உதாரணம்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

எனவே பெரும்பாலானோர் மத்தியில் தேசிய நெடுஞ்சாலைகள் மீது அதிருப்தியே நிலவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பலர் வெறுக்க மற்றொரு முக்கியமான காரணம் டோல்கேட்கள். இந்தியா முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட டோல்கேட்கள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

இதில், 40க்கும் மேற்பட்ட டோல்கேட்கள் தமிழகத்தில் இயங்கி கொண்டுள்ளன. டோல்கேட்களை வாகன ஓட்டிகள் வெறுக்க, அங்கு அரங்கேற்றப்பட்டு வரும் விதிமுறை மீறல்களே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

2 சுங்கச்சாவடிகளுக்கு இடைப்பட்ட தொலைவு குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டர்களாக இருப்பது அவசியம். ஆனால் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து டோல்கேட்கள் அமைக்கப்பட்டு, கட்டண கொள்ளை அரங்கேற்றப்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் புகார்களை அடுக்குகின்றனர்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

அத்துடன் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரிக்கும் பட்சத்தில், அங்கு கட்டணம் குறைக்கப்பட வேண்டியதும் அவசியமாக உள்ளது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், கட்டணமும் உயர்த்தப்பட்டு கொண்டேதான் இருக்கிறது.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

இதுதவிர எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டண கொள்ளை நடைபெறுவதாகவும் வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். சுங்கச்சாவடிகளை இன்னும் பலர் வெறுக்க மற்றொரு முக்கியமான காரணம் காத்திருக்கும் நேரம்தான்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

சில சமயங்களில் வாகன ஓட்டிகள் டோல்கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. குறிப்பாக வார விடுமுறை அல்லது நீண்ட விடுமுறை தொடங்கும் நாட்கள் மற்றும் முடியும் நாட்களில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் டோல்கேட்களை ஒரு சேர முற்றுகையிடுகின்றன.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

எனவே கட்டணம் செலுத்தி விட்டு செல்வதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவும் நீண்ட தொலைவு பயணிப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு டோல்கேட்டிலும் நீண்ட நேரம் நின்று நின்று செல்ல வேண்டும்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததன் மூலமாக மிச்சம் பிடிக்கப்பட்ட நேரத்தை, டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கும்போது இழந்து விடக்கூடிய சூழல்தான் உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் டோல்கேட்களை பலரும் வெறுக்கின்றனர்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

எனவே டோல்கேட்களை மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்க மறுக்கிறது. இதன் காரணமாக டோல்கேட்களை முற்றுகையிட்டு அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

சில சமயங்களில் டோல்கேட்கள் அடித்தும் நொறுக்கப்படுகின்றன. எனவே இத்தகைய தாக்குதல்களில் இருந்து காக்கும் விதமாக, டோல்கேட்களை நகர்ப்புறங்களில் இருந்து தள்ளி அமைக்க ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆனால் டோல்கேட்களை மூடும் எண்ணம் உள்ளதா? என்பது தெரியவில்லை.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

இதனிடையே ஏற்கனவே குறிப்பிட்டபடி வாகன ஓட்டிகள் டோல்கேட்களை வெறுக்க காத்திருக்கும் நேரம் அதிகரிப்பும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட தற்போது ஓர் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

158 கிலோ மீட்டர் நீளமுள்ள ஓஆர்ஆர் எனப்படும் ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road-ORR) டோல்கேட்களில்தான் இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. அதாவது 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நின்று கொண்டிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

ஓஆர்ஆர் சாலையின் எந்தவொரு டோல்கேட்டின் எந்தவொரு லேனிலும் (Lane) இருபதுக்கும் அதிகமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தால், இலவசமாகவே பயணிக்கலாம். டோல் கலெக்ட்டிங் ஏஜென்சி, கட்டணம் வசூலிக்காமலேயே அனைத்து வாகனங்களையும் க்ளியர் செய்து விடும்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் குறைந்தபட்சம் இதுபோன்ற நடவடிக்கைகளையாவது எடுக்க வேண்டும் என்பதே அனைத்து வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட்ட ஓர் நல்ல நடவடிக்கை இது. அதே சமயம் ஒவ்வொரு லேன்களிலும் நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை, டோல்கேட் ஊழியர்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியதிருக்கும்.

அடுத்த மாதம் முதல் டோல்கேட்களில் கட்டணம் கிடையாது... இலவசமாக செல்ல புதிய நடைமுறை அமலாகிறது...

ஏனெனில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில், தங்கள் லேனில் நின்று கொண்டிருக்கும் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பாக பயணிகள் முறையிடக்கூடும். இது தொடர்பாக பயணிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Most Read Articles
English summary
From April 1, 2019, No Fee If More Than 20 Vehicles At Hyderabad Outer Ring Road Tollgates. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X