Just In
- 1 hr ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அதிரடி திட்டம்... எந்த ஊரில் தெரியுமா?
பிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் இந்த பிரச்னை கையை மீறி சென்றுள்ளது. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால்தான் காற்று அதிகம் மாசடைகிறது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியை போல் காற்று அதிகம் மாசடைந்த இந்திய நகரங்களில் பீகார் மாநிலம் கயாவும் ஒன்று. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், உலகில் காற்று அதிகம் மாசடைந்த நான்காவது நகரம் கயா என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
எனவே கயா நகரில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக தற்போது அதிரடி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி கயா நகரின் குறிப்பிட்ட சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அங்கு எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிகிறது.
கயா நகரின் மிகவும் பிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. கயா நகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அதிரடி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு பிரச்னையை சமாளிப்பதற்காக கயா மாவட்ட நிர்வாகம் விரிவான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
குறிப்பிட்ட சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை விதிப்பது என்பது இதில் ஒன்றாக உள்ளது. எந்தெந்த சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கலாம்? என்பதை கண்டறியும் பணியில் தற்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை வழங்கிய பிறகு இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும்.
அனேகமாக கயா நகரின் ஜிபி ரோடு, கேபி ரோடு மற்றும் டீக்கரி ரோடு ஆகிய சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், இந்த சாலைகளில் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை மட்டுமே இயக்க முடியும்.
இதுதவிர மேலும் சில சாலைகளும் இந்த பட்டியலில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்ட சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாது காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான வேறு சில நடவடிக்கைகளையும் கயா மாவட்ட நிர்வாகம் எடுக்கவுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!