Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?
ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் 82 ஆயிரம் வானங்களை முற்றிலுமாக அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழலுக்கு பல்வேறு விதமான பின்விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையால் புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசுறுதல் உள்ளிட்ட பல்வேறு தீங்குகள் உருவாகின்றன.
ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
அதேசமயம், பின்விளைவில்லா வாகனமான மின் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளும் படு வேகமாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும், மின் வாகனத்திற்கான சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்ட ஒரு சில விஷயங்கள் குறைவாக இருப்பதன் காரணத்தால், மக்கள் மத்தியில் மின் வாகனம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் வாகனத்திற்கு எதிரான போரை தொடுத்த வண்ணமே இருக்கின்றன.
ஏனென்றால், இந்த வாகனங்கள் பல்வேறு விதமான பிரச்னைக்கு மூலதனாக இருக்கின்றன. இதனை தலைநகர் டெல்லியின் சுற்றுப்புறச் சூழலின் நிலையைக் கண்டாலே நமக்கு புரிந்துவிடும். ஆகையால், டெல்லி என்சிஆர் பகுதியில் மாசினை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2015ம் ஆண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்த பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்த டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கக் கூடாது என அறிவித்திருந்தது. இந்த உத்தரவை தலைநகர் டெல்லியின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அண்மையில் தகுதி நீக்கம் (பதிவெண் ரத்து) செய்யப்பட்ட 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய இருப்பதாக காசியாபாத் ஆர்டிஓ அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த பழைய வாகனங்களைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க இருவிதமான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதாவது, பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் பத்து வயதை பூர்த்தியடைந்த டீசல் வாகனங்களை டெல்லியின் என்சிஆர் பகுதிக்குள் இயக்க வேண்டுமானால் மறு பதிவு செய்திருக்க வேண்டும்.
அதேபோன்று, அந்த பழைய வாகனங்களை என்சிஆர் அல்லாத மற்ற மாநிலத்திற்கு மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தடையில்லா சான்றினை ஆர்டிஓ-வில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
இவற்றிற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுமாறு என்சிஆர் ஆர்டிஓ அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், ஒரு சிலர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானோர் பதிவு செய்ய தவறி விட்டனர்.
அத்தகைய பதிவு செய்யப்படாத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதாக ஆர்டிஓ அலுவலகம் சமீபத்தில் அறிவித்தது. ஆகையால், அவை சாலையில் இயக்கப்படுமானால், அது மோட்டார் வாகன விதிப்படி குற்றமாகும். எனவே, அந்த வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, நகரில் இருந்து அகற்றி ஸ்கிராப் செய்ய முடிவு செய்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி என்சிஆர் பகுதியின் ஆர்டிஓ அதிகாரி விஸ்வஜித் சிங் கூறியதாவது,
"பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 60 நாட்களுக்கு பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், இதனை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். பெரும்பாலானோர் மறு பதிவு செய்ய தவறிவிட்டனர். அத்தகைய வாகனங்களை கண்டறிந்து ஸ்கிராப் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!