Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?
ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் 82 ஆயிரம் வானங்களை முற்றிலுமாக அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழலுக்கு பல்வேறு விதமான பின்விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையால் புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசுறுதல் உள்ளிட்ட பல்வேறு தீங்குகள் உருவாகின்றன.
ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
அதேசமயம், பின்விளைவில்லா வாகனமான மின் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளும் படு வேகமாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும், மின் வாகனத்திற்கான சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்ட ஒரு சில விஷயங்கள் குறைவாக இருப்பதன் காரணத்தால், மக்கள் மத்தியில் மின் வாகனம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் வாகனத்திற்கு எதிரான போரை தொடுத்த வண்ணமே இருக்கின்றன.
ஏனென்றால், இந்த வாகனங்கள் பல்வேறு விதமான பிரச்னைக்கு மூலதனாக இருக்கின்றன. இதனை தலைநகர் டெல்லியின் சுற்றுப்புறச் சூழலின் நிலையைக் கண்டாலே நமக்கு புரிந்துவிடும். ஆகையால், டெல்லி என்சிஆர் பகுதியில் மாசினை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2015ம் ஆண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்த பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்த டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கக் கூடாது என அறிவித்திருந்தது. இந்த உத்தரவை தலைநகர் டெல்லியின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அண்மையில் தகுதி நீக்கம் (பதிவெண் ரத்து) செய்யப்பட்ட 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய இருப்பதாக காசியாபாத் ஆர்டிஓ அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த பழைய வாகனங்களைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க இருவிதமான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதாவது, பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் பத்து வயதை பூர்த்தியடைந்த டீசல் வாகனங்களை டெல்லியின் என்சிஆர் பகுதிக்குள் இயக்க வேண்டுமானால் மறு பதிவு செய்திருக்க வேண்டும்.
அதேபோன்று, அந்த பழைய வாகனங்களை என்சிஆர் அல்லாத மற்ற மாநிலத்திற்கு மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தடையில்லா சான்றினை ஆர்டிஓ-வில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
இவற்றிற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுமாறு என்சிஆர் ஆர்டிஓ அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், ஒரு சிலர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானோர் பதிவு செய்ய தவறி விட்டனர்.
அத்தகைய பதிவு செய்யப்படாத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதாக ஆர்டிஓ அலுவலகம் சமீபத்தில் அறிவித்தது. ஆகையால், அவை சாலையில் இயக்கப்படுமானால், அது மோட்டார் வாகன விதிப்படி குற்றமாகும். எனவே, அந்த வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, நகரில் இருந்து அகற்றி ஸ்கிராப் செய்ய முடிவு செய்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி என்சிஆர் பகுதியின் ஆர்டிஓ அதிகாரி விஸ்வஜித் சிங் கூறியதாவது,
"பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 60 நாட்களுக்கு பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், இதனை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். பெரும்பாலானோர் மறு பதிவு செய்ய தவறிவிட்டனர். அத்தகைய வாகனங்களை கண்டறிந்து ஸ்கிராப் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!