Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Movies BMW கார் வாங்கிய இயக்குநர்.. எடுத்ததே ஒரே படம்.. குதர்க்கமாக கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாகன விற்பனையை அதிகரிக்க அரசு அதிரடி... அசத்தலான அறிவிப்பு வெளியானது... என்னவென்று தெரியுமா?
வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக அசத்தலான அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி வரி, ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஏற்படுத்திய தாக்கம், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள், போக்குவரத்து நெரிசல் ஆகியவை இதில் மிகவும் முக்கியமானவை.
இருந்தபோதும் வாகன விற்பனையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் கோவா மாநில அரசு தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக கோவா மாநில அரசு சாலை வரியை 50 சதவீதம் குறைக்கவுள்ளது. சாலை வரியை 50 சதவீதம் குறைப்பது என்ற முடிவை கோவா மாநில அரசு நேற்று (செப்டம்பர் 30) எடுத்தது. வாகனங்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அக்டோபர் முதல் மூன்று மாதங்களுக்கு சாலை வரியை 50 சதவீதம் குறைக்க கோவா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறுகையில், ''வாகன விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தள்ளுபடி தொடர்பாக ஒவ்வொரு நாளும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதே பாணியில் கோவா மாநிலத்தில் வாகன விற்பனையை அதிகரிப்பதற்காக சாலை வரியை 50 சதவீதம் குறைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தீபாவளி உள்பட பண்டிகை காலம் நெருங்குவதால், அரசின் முடிவு வாகன விற்பனையை அதிகரிக்க உதவும் எனவும் அமைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ''சாலை வரியை குறைப்பதற்கான கோப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு சாலை வரி குறைக்கப்படும்'' என்றார்.
கோவா மாநிலத்திலும் வாகன விற்பனை சமீப காலமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் விற்பனை சரிவடைய ஜிஎஸ்டியும் ஒரு காரணம்'' என்றார்.
கோவா மாநிலத்தில், பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையானது கடந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் 15 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019ம் ஆண்டின் ஏப்ரல்-ஜூலை கால கட்டத்தில் 19,485 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2018ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் 22,480 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
கோவா அரசு தற்போதுதான் விழித்து கொண்டு வாகன விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பே, வாகன விற்பனையை அதிகரிக்க தேவையான அறிவிப்புகளை வெளியிட்டு விட்டது. அந்த அறிவிப்புகள் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்டோமொபைல் துறையை சரிவிலிருந்து மீட்பதற்கான புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். அந்த திட்டங்கள் பின்வருமாறு:
வாகனக் கடன் வட்டி குறைப்பு
வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், கார் வாங்குவோரை கவர்ந்து இழுக்கும் வாய்ப்பை நிறுவனங்கள் பெற முடியும். மொத்தத்தில், இந்த புதிய அறிவிப்புகள் வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!