Just In
- 1 hr ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 2 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 4 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 9 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
Don't Miss!
- News சென்னை பப் விபத்து.. இரவோடு இரவாக தலைமறைவான உரிமையாளர்.. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Movies என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கோரிக்கையை ஏற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கோவா முதல்வர்.. புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்
வாகன விற்பனையகங்களின் உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று அதிரடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்திய வாகன சந்தை கடந்த 20 ஆண்டுகளில் காணாத அளவிலான விற்பனை வீழ்ச்சியை அண்மைக் காலங்களாகச் சந்தித்து வருகின்றது.
இந்த மந்த நிலையில் இருந்து தப்பிக்கும் விதமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தல், உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக இழுத்து மூடுதல் உள்ளிட்ட செயல்களில் அவை ஈடுபட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி, சில டீலர்கள் அவர்களின் ஷோரூமிற்கு மூடு விழாவை செய்து வருகின்றனர். இருப்பினும், விற்பனைக்கு சரிவிற்கு ஈடு கொடுக்க முடியாத சூழலே நிலவி வருகின்றது.
கடந்த காலங்களில் உலகின் மிகப் பெரிய வாகன சந்தையாக நிலவி வந்த இந்திய வாகன சந்தையின் இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அதிகபட்ச ஜிஎஸ்டி வரி, எரிபொருள் வாகனங்களின் பதிவு கட்டணம் உயர்வு உள்ளிட்டவையே முக்கிய காரணியாக இருக்கின்றது.
ஆகையால், பாதாளத்தின் விளம்பில் உள்ள இந்திய வாகனத்துறையை மீட்க ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைக்குமாறு மத்திய அரசிடம் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றுகூடி கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளன.
ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.
இந்நிலையில், வீழ்ச்சியடைந்துள்ள வாகன சந்தைக்கு சற்றே கை கொடுக்கும் விதமாக, யூனியன் பிரதேசமான கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பிரமோத் சாவந்த், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வருகின்ற டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பதிவு செய்யப்படும் புதிய வாகனங்கள் அனைத்திற்கும், சாலை வரி பாதியளவு மட்டுமே வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பால், வாகனங்களின் பதிவிற்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 50 சதவீதம் குறைந்துள்ளது.
மாநில போக்குவரத்துத் துறை தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாகனங்களின் விற்பனை ஒட்டுமொத்தமாக 15-17 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிகின்றது. இது மேலும் அதிகரிக்கும் என அம்மாநில வாகன உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்தே இந்த அதிரடி நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
தற்போது, கோவா அரசு ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்திற்கு வரியாக அந்த வாகன த்தின் விலையில் இருந்து 9 சதவீதத்தைப் பெறுகின்றது. அதேபோன்று, ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சம் வரையுள்ள இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதத்தையும், ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான விலையுள்ள பைக்குகளுக்கு 15 சதவீதம் வரியையும் அது வசூலித்து வருகின்றது.
இதேபோல, ரூ. 6 லட்சம் வரையுள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு 9 சதவீதம் வரியும், பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனையாகும் வாகனங்களுக்கு 11 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகின்றது. அதேசமயம், ரூ. 10-15 வரையுள்ள வாகனங்களுக்கு 11 சதவீதமாக வசூல் செய்யப்படுகின்றது. இதில், உச்சபட்சமாக 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனையாகும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 13 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
ஏற்கனவே, நாடு முழுவதும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு டீலர்ஷிப் நிறுவனங்கள் கணிசமான சலுகை திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கோவா அரசு கையாண்டு இருக்கும் இந்த நடவடிக்கை சற்று வாகன விற்பனைக்குக் கைகொடுக்கும் என நம்பப்படுகின்றது.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!