Just In
- 59 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!
குறித்த காலக்கெடுவிற்குள் மின்சார பஸ்களை சப்ளை செய்யாத டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான டாடா மோட்டார்ஸ் பல்வேறு வகைகளில் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், மின்சார வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்,
கடந்த 2017ம் ஆண்டில் 11 மாநிலங்களுக்கு 1,440 மின்சா பஸ்களை வாங்குவதற்கு மத்திய கனரக தொழிற்துறை நிதி ஒதுக்கீடு செய்தது.
இதற்கான டென்டரில் டாடா மோட்டார்ஸ் பங்கேற்று, ஆர்டரையும் கைப்பற்றியது. இதன்படி, லக்ணோ, ஜம்மு, கொல்கத்தா, இந்தூர், கவுகாத்தி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாநகரங்களுக்கு தலா 40 மின்சார பஸ்களை சப்ளை செய்வதற்கு அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் மத்திய அரசின் FAME என்ற மின்சார வாகனங்களுக்கான முதல்கட்ட மானியத் திட்டத்தின் கீழ் போடப்பட்டது. இதன்மூலமாக, 60 சதவீதம் அளவுக்கு மானியம் வழங்க வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, குறித்த காலக்கெடுவில் மின்சார பஸ்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யவில்லை.
காலக்கெடு நீட்டித்து கொடுக்கப்பட்டும் சப்ளை செய்யாமல் டாடா மோட்டார்ஸ் தாமதப்படுத்திவிட்டது. இதனால், ஃபேம் திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாத நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இது மாநில அரசுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதையடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மீது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளன. அதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அரசு டென்டர்களில் பங்கேற்காத வகையில் கருப்பு பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்துள்ளன.
மேலும், உத்தரபிரதேச அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரூ.3.42 கோடியை அபராதமாக விதித்துள்ளது. அதேபோன்று, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் டாடா மோட்டார்ஸ் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளன.
மேலும், ஃபேம்-2 மின்சார வாகனங்களுக்கான மானியத் திட்டத்தின் டென்டர்களில் டாடா மோட்டார்ஸ் பங்கேற்க முடியாத வகையில் சட்ட ரீதியிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
Source: Economic Times
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..