Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கான முடிவு எடுக்கும் அதிகாரம் தனது கையில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. குறிப்பாக, இதன் தாக்கத்தால் ஆட்டோமொபைல் துறை பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வாகன விற்பனையை அதிகரிப்பதற்கான புதிய ஊக்குவிப்புத் திட்டங்களை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.
இந்த ஊக்குவிப்புச் சலுகைகள் மற்றும் பிஎஸ்-4 வாகனப் பதிவு குறித்த விளக்கம் போன்றவை சற்று ஆறுதலை தந்துள்ளது. இருப்பினும், தற்போது வாகனத் துறை இருக்கும் கடினமான சூழலில், இந்த திட்டடங்கள் போதாது என்றே கருதப்படுகிறது.
மேலும், வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. தற்போது வாகனங்கள் மீது விதிக்கப்படும் அதிகபட்சமான 28 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஜிஎஸ்டி வரி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்," வாகன விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். மேலும், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலின் கையில்தான் உள்ளது. அது என் கையில் இல்லை.
வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு யோசனை வழங்கி இருக்கிறோம். வரும் 20ந் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடக்க இருக்கிறது. அதில், நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
இதனால், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் இது நிச்சயம் வாகனத் துறையை ஊக்கப்படுத்தும் என்று கருதப்படுகிறது. பண்டிகை காலத்தில் இந்த அறிவிப்பு வந்தால், அது நிச்சயம் கார், பைக் உள்ளிட்ட வாகனத் துறைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு