Just In
- 26 min ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 5 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 5 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 6 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த லேனை பயன்படுத்தினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்... எச்சரிக்கும் காவல்துறை!
போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போர் கொடி தூக்கியிருக்கும் காவல்துறையினர், ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், குறிப்பிடப்பட்ட லேனை மாற்றி பயன்படுத்தினால் ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பிதிவில் காணலாம்.
சாலைகளில் விபத்தை உருவாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக போக்குவரத்து விதிமீறல்கள் இருக்கின்றன. இது சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனைக் கட்டுபடுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
அந்தவகையில், மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய சட்டம், முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை பன் மடங்கு உயர்த்தி வசூலிக்க வழிவகைச் செய்யும்.
இவ்வாறு, போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போர் கொடி தூக்கப்பட்டு வரும்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் போக்குவரத்துத்துறை, தன் பங்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், நகர சாலைகள் மற்றும் மாநிலத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் முதலாவது வலது பக்க பாதையை கனரக வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. மீறினால், அபராதமாக ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்பட இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
கனரக வாகனங்கள் சாலையின் வலது பக்க லேனை பயன்படுத்துவதால் மற்ற இலகு ரக வாகனங்கள் முன்னேறிச் செல்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. மேலும், சில சமயங்களில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாக இது வழிவகை செய்கின்றது. ஆகையால், இதனை தவிர்க்கும் விதமாக அம்மாநில போக்குவரத்துத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
தற்போது வரை இந்த வீதிமீறலுக்கு ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது. புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தால் அது ரூ. 1,000ஆக மாற்றப்பட உள்ளது. ஆனால், இவற்றைக் காட்டிலும் அதிகமாக, ரூ. 5,000 வரை வசூலிக்க இருப்பதாக மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 15ம் தேதிகூட மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்துத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், மும்பை-புனே எக்ஸ்பிர்ஷ்வே மற்றும் மும்பை-அஹமதாபாத் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகங்கள் வலது பக்க சாலையில் செல்லக்கூடாது என அறிவித்திருந்தது. ஆனால், அதை முறையாக யாரும் கடைபிடிக்காத காரணத்தால் இத்தகைய நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது.
அண்மைக் காலங்களாக நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக போக்குவரத்து விதிமீறல்களும், அதனால் உருவாகும் பின்விளைவுகளும் இருந்து வருகின்றன. இதன்காரணமாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு எதிராக இரும்பு கரங்களைக் கொண்டு அடக்க திட்டம் தீட்டி வருகின்றது.
அதனடிப்படையிலேயே அண்மையில் மத்திய அரசு, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது. இத்துடன், சில மாநில அரசுகளும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றது.
அந்தவகையில், அண்மையில் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகர போலீஸார், தவறான பாதையில் வந்த ஆறு வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தனர்.
பொதுவாக, இம்மாதிரியான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு மோட்டார் வாகன சட்டம், 119 மற்றும் 177 பிரிவுகளின் கீழ் ரூ. 1,100 அபராதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், வாகன ஓட்டிகள் முறையாக விதிகளை கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஹைதராபாத் 14வது சிறப்பு நீதிமன்றம் இத்தகைய தண்டனை வழங்கியது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!