Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓட்டல் பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
வாலட் பார்க்கிங்கில் கொடுக்கப்படும் கார் திருடு போனால் யார் பொறுப்பேற்பது என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
கடந்த 1998ம் ஆண்டு டெல்லியில் உள்ள தாஜ் மஹால் ஓட்டலுக்கு காரில் வந்த விருந்தினர் ஒருவர் தனது மாருதி ஸென் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு தங்கியுள்ளார். ஆனால், திரும்பி வந்து பார்த்தபோது, காரை காணவில்லை.
இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது. இது உரிமையாளரின் சொந்த பொறுப்பு என்றும் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்டு குறைதீர் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில், காரை பறிகொடுத்தவருக்கு ரூ.2.8 லட்சத்தை இழப்பீடாக வழங்க ஓட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், இழப்பீடு வழங்க மறுத்த ஓட்டல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பார்க்கிங் செய்தபோது கொடுத்த ரசீதில், உரிமையாளர்கள் சொந்த பொறுப்பிலேயே காரை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் வாதாடியது.
இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதானந்தகவுதர் மற்றும் அஜய் ரோத்தகி ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கனவே தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
ஓட்டல் நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த நீதிபதிகள்,"ஓட்டல் பார்க்கிங்கில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் காணாமல் போனாலும், சேதம் அடைந்தாலும் அதற்கு ஓட்டல் நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும்," என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
அதேநேரத்தில், இதுபோன்ற விஷயத்தில் ஓட்டல் நிர்வாகம் எப்போதுமே பொறுப்பேற்க வேண்டியதில்லை. இயற்கை சீற்றங்கள், உரிமையாளரின் அலட்சியத்தால் சேதம் அடைவது, விதிமீறல் தொடர்பாக அரசு அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட தருணங்களில் ஓட்டல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டாம் என்றும் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் வசதி அளிக்கப்படுகிறது. கார் பார்க்கிங் செய்வதற்காக தனியாக கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விதத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை. அவர்கள் வாங்கும் பொருட்களால் வரும் லாபமே போதுமானதாக கருதுகின்றன.
இந்த நிலையில், பார்க்கிங்கிற்காக கொடுக்கப்படும் ரசீதில், காரில் ஏற்படும் சேதம், திருடு போதல் உள்ளிட்டவற்றிற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது என்று வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதனை வைத்து பார்க்கிங்கில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் திருடு போவது உள்ளிட்டவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொறுப்பேற்பதில்லை. அது உரிமையாளரின் சொந்த பொறுப்பு என்றும் தெரிவித்துவிடுகின்றனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இது நிச்சயம் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் தீர்ப்பாகவே கருத முடியும்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!