Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கமிஷனரின் காரை சிறைபிடித்த போலீஸார் — வைரலாகும் புகைப்படம்... காரணம் தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்!
கமிஷனரின் காரை போலீஸார் சிறைப்பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை எதற்கு என தெரிந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்...
அண்மைக் காலங்களாக நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் போலீஸார் துடிப்பாகவும், அதிரடியாகவும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக எந்த அளவிற்கு போலீஸார் குறித்து சர்ச்சையான தகவல்கள் வெளியாகியதோ, அந்த அளவிற்கு தற்போது, அவர்களின் அதிரடி நடவடிக்கைக் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், முறைகேடில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டுபிடிக்க சாலையோர சிசிடிவி கேமிராக்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களையும் போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு, முறைகேட்டில் ஈடுட்ட சில இளைஞர்களை, சமூக வலைதளங்களைக் கொண்டு போலீஸார் கண்டறிந்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கான அபராதத்தையும் விதித்து வருகின்றனர்.
இதனை வெளிப்படுத்தும் வகையில், சமீபத்தில் ஓர் சம்பவம் நிகழ்ந்தது. அதில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அவரது, இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வதுபோன்ற காட்சிகளை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டதை அடுத்து, போக்குவரத்து போலீஸாரின் கண்களிலும் சிக்கியது. இந்த வீடியோவை ஆதரமாகக் கொண்ட போலீஸார், அந்த இளைஞருக்கு உரிய தண்டனையை விதித்தனர்.
இந்த நிலையில், இதே பாணியை இந்தியாவின் குடிமுகன்கள் சிலரும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில், முறைகேட்டில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த தகவலை, சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதற்கான, எதிர்ப்பை சமூக வலைதளம் மூலமாகவே அவர்கள் திரட்டி வருகின்றனர். அவ்வாறு, தவறில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் சிலர் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து வருகின்றனர்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமமே என்ற நோக்கில் இளைஞர்கள் செய்து வரும் இந்த செயலை அங்கீகரிக்கும் விதமாக, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் சிலர், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கான மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சி ஆணையரின் காரின்மீதும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை கர்டாக் ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, மொஹத் லதீஃப் பப்ளா என்ற இளைஞர், அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், அவர் ஹைதராபாத் மாநகராட்சியின் ஆணையரான தனா கிஷோர் ஐஏஎஸ் அதிகாரியின் காருடைய புகைப்படத்தையும், அவர் நிலுவையில் வைத்துள்ள அபராதத் தொகையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதனால், தற்போது ஹைதராபாத் மாநகராட்சியின் ஆணையர் தனா கிஷோர் சிக்கலில் சிக்கியுள்ளார். மேலும், அவரின் கார் விதிமீறலில் ஈடுபட்டதற்காக தற்போது ரூ. 6,210 அபராதமாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் டொயோட்டா பார்ச்சுனர் கார் (TS09fa4248), ஒரு முறைக்கும் மேலாக, பலமுறை விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக அந்த புகைப்படங்கள்மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த கார் ஆணையர் கிஷோர் இயக்கப்படுவது அல்ல. இதனை, அவருக்கென தனியாக நியமிக்கப்பட்ட ஓட்டுநரே இயக்கி வருகின்றார்.
அவ்வாறு, அவர் காரை இயக்கும்போது பலமுறை முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாகவும், அந்த கார் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆணையர் கிஷோர் அபராதம் கட்டியுள்ளார். அந்தவகையில், ரூ. 1,000 அவர் செலுத்தியுள்ளார். ஆனால், அதற்கும் மேலாக பல ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை நிலுவையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், அதிக வேகம், ஆபத்தான பயணம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அந்த கார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால், தற்போது கார்பரேஷன் கமிஷனர் அலுவலகத்திற்கும், ஐஏஎஸ் அதிகாரி கிஷோர் உள்ளிட்டோருக்கு கரும் புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், இந்த புகார்கள் மீது அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகின்றது.
Imgae source: Mohd Lateef Babla/Twitter, Cartoq
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...