Just In
- 35 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அரசியலை மிஞ்சிய மாபெரும் கூட்டணி: 3 நிறுவனங்களின் ஒன்றிணைப்பால் நடுங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!
அரசியலை மிஞ்சும் வகையில் மாபொரும் கூட்டணியை வாகனம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய், கியா மற்றும் ரிமேக் ஆகிய நிறுவனங்கள் செய்துள்ளன. எதற்காக இந்த கூட்டணி என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தென் கொரியாவை மையமாகக் கொண்டு, வாகன தயாரிப்பில் ஜம்பவான்களாக செயல்பட்டு வரும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனம், க்ரோஷியா நாட்டின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ரிமேக் உடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இணைப்பின் மூலம் புதிய எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த இணைப்பில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்காக ஹூண்டாய் குழுமம் 632 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், இரண்டு புதிய அதிநவீன தொழில்நுட்பத்திலான எலக்ட்ரிக் கார்கள், க்ரோஷியன் நாட்டு நிறுவனமான ரிமேக் உடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளன. இந்த கார் 2020ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் ரிமேக் உடன் இணைந்து, முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வெர்ஷனான மிட்ஷிப் ஸ்போர்ட்ஸ் ரகத்திலான எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க இருக்கின்றன. இந்த கார், ஹை-பெர்ஃபார்மென்ஸ் ப்யூவல்-செல் வாகனத்தைப்போன்று, ஹூண்டாயின் என் பெர்ஃபார்மென்ஸ் டிவிஷனில் தயாராக உள்ளது.
முன்னதாக, ஹூண்டாய் மோட்டார் குழுமம் மிக அதிகளவிலான தொகையை ஹைட்ரோஜனால் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க முதலீடு செய்தது. ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் குறைந்த அளவு கார்பன் வாயுவை வெளியிடும் என்ற காரணத்தால், இந்த முதலீட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது. மேலும், இதன்மூலம், வருடத்திற்கு குறைந்தது 7 லட்சம் வாகனங்களையாவது உற்பத்திச் செய்ய வேண்டும் என்ற இலக்கை அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இதைத்தொடர்ந்தே, மின் வாகனங்களை உற்பத்திச் செய்ய தற்போது, 632 கோடிக்கும் மேலான தொகையை முதலீடு செய்துள்ளது. இதில், ஹூண்டாய் நிறுவனம், 506 கோடி ரூபாயும், கியா நிறுவனம் சார்பில் 127 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது, மின் வாகனங்களை உற்பத்தி செய்ய, உலகம் முழுவதும் இயங்கும் அனைத்து ஹூண்டாய் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து வழங்கப்பட இருக்கின்றது.
இரு நிறுவனங்களின் இணைப்பானது, மின் வாகன உற்பத்தியில் ஓர் புதிய மைல்கல்லை எட்ட உத இருப்பதாகவும், மின்வாகனம் சார்ந்த சந்தையில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னோடியக திகழ இருப்பதாகவும், ஹூண்டாய் நிறுவனம் இரு இணைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
க்ரோஷிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த ரிமேக் நிறுவனம், ரிமேக் பிராண்டில் இதுவரை பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து, வெளிநாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. அண்மையில் கூட இந்த நிறுவனம் 415 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய சி-ரகத்திலான இரண்டு ஹைபர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நிறுவனத்துடன் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் இணைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு நாடுகளில் அதன் கார்கள் மூலம் ராஜ்யம் செய்து வருகின்றது. இந்த நிலையில், தற்போது மின் வாகனச் சந்தையிலும், அதன் ஆதிக்கத்தைச் செலுத்தும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை போட்டி நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350