Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அரசியலை மிஞ்சிய மாபெரும் கூட்டணி: 3 நிறுவனங்களின் ஒன்றிணைப்பால் நடுங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!
அரசியலை மிஞ்சும் வகையில் மாபொரும் கூட்டணியை வாகனம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய், கியா மற்றும் ரிமேக் ஆகிய நிறுவனங்கள் செய்துள்ளன. எதற்காக இந்த கூட்டணி என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தென் கொரியாவை மையமாகக் கொண்டு, வாகன தயாரிப்பில் ஜம்பவான்களாக செயல்பட்டு வரும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனம், க்ரோஷியா நாட்டின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ரிமேக் உடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இணைப்பின் மூலம் புதிய எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த இணைப்பில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்காக ஹூண்டாய் குழுமம் 632 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், இரண்டு புதிய அதிநவீன தொழில்நுட்பத்திலான எலக்ட்ரிக் கார்கள், க்ரோஷியன் நாட்டு நிறுவனமான ரிமேக் உடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளன. இந்த கார் 2020ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் ரிமேக் உடன் இணைந்து, முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வெர்ஷனான மிட்ஷிப் ஸ்போர்ட்ஸ் ரகத்திலான எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க இருக்கின்றன. இந்த கார், ஹை-பெர்ஃபார்மென்ஸ் ப்யூவல்-செல் வாகனத்தைப்போன்று, ஹூண்டாயின் என் பெர்ஃபார்மென்ஸ் டிவிஷனில் தயாராக உள்ளது.
முன்னதாக, ஹூண்டாய் மோட்டார் குழுமம் மிக அதிகளவிலான தொகையை ஹைட்ரோஜனால் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க முதலீடு செய்தது. ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் குறைந்த அளவு கார்பன் வாயுவை வெளியிடும் என்ற காரணத்தால், இந்த முதலீட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது. மேலும், இதன்மூலம், வருடத்திற்கு குறைந்தது 7 லட்சம் வாகனங்களையாவது உற்பத்திச் செய்ய வேண்டும் என்ற இலக்கை அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இதைத்தொடர்ந்தே, மின் வாகனங்களை உற்பத்திச் செய்ய தற்போது, 632 கோடிக்கும் மேலான தொகையை முதலீடு செய்துள்ளது. இதில், ஹூண்டாய் நிறுவனம், 506 கோடி ரூபாயும், கியா நிறுவனம் சார்பில் 127 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது, மின் வாகனங்களை உற்பத்தி செய்ய, உலகம் முழுவதும் இயங்கும் அனைத்து ஹூண்டாய் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து வழங்கப்பட இருக்கின்றது.
இரு நிறுவனங்களின் இணைப்பானது, மின் வாகன உற்பத்தியில் ஓர் புதிய மைல்கல்லை எட்ட உத இருப்பதாகவும், மின்வாகனம் சார்ந்த சந்தையில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னோடியக திகழ இருப்பதாகவும், ஹூண்டாய் நிறுவனம் இரு இணைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
க்ரோஷிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த ரிமேக் நிறுவனம், ரிமேக் பிராண்டில் இதுவரை பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து, வெளிநாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. அண்மையில் கூட இந்த நிறுவனம் 415 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய சி-ரகத்திலான இரண்டு ஹைபர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நிறுவனத்துடன் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் இணைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு நாடுகளில் அதன் கார்கள் மூலம் ராஜ்யம் செய்து வருகின்றது. இந்த நிலையில், தற்போது மின் வாகனச் சந்தையிலும், அதன் ஆதிக்கத்தைச் செலுத்தும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை போட்டி நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க