Just In
- 33 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- 4 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 5 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
Don't Miss!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமரா... ஹூண்டாய் அசத்தல்!
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் உலகின் 6வது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படும் இந்த நிறுவனம் ஹூண்டாய், ஜெனிசிஸ் மற்றும் கியா ஆகிய மூன்று பிராண்டுகளில் விற்பனையாகும் கார்களுக்கான உதிரிபாகங்களையும், தொழில்நுட்பங்களையும் உருவாக்கி தந்து வருகிறது.
இந்த நிலையில், கார்களுக்கான சைடு மிரர்களுக்கு மாற்றாக புதிய கேமரா அமைப்பை ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கேமரா மானிட்டரிங் சிஸ்டம் (CMS) என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த அமைப்பு சைடு மிரர்களைவிட அதிக நன்மைகளை அளிக்கும் என்று ஹூண்டாய் மொபிஸ் தெரிவிக்கிறது.
கார் வேகமாக செல்லும்போது காற்றால் சைடு மிரர்கள் மூலமாக இரைச்சல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனை லாவகமாக தடுக்கும் விதத்தில், புதிய கேமரா அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன், இந்த புதிய சைடு கேமராவால் காரின் ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக மேம்படும் என்று ஹூண்டாய் மொபிஸ் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, காரின் மைலேஜ் அதிகரிக்கும் என்று அடுத்த நன்மையை கூறுகிறது ஹூண்டாய் மொபிஸ்.
இந்த புதிய சைடு கேமரா அமைப்பில் மூன்று விதமான கோணங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால், பின்னால் மற்றும் பக்கவாட்டில் மிக அருகில் வரும் வாகனங்களையும், வளைவுகளில் திரும்பும்போது வரும் வாகனங்களையும் எளிதாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த புதிய கேமரா அமைப்பு வழங்கும்.
காரை ஓட்டுபவர் சாலையில் இருந்து கவனத்தை எடுத்து சைடு மிரர்களை பார்ப்பதை இது தவிர்க்கும். உட்புறத்தில் இருக்கும் மானிட்டர் மூலமாகவே பின்னால் மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும். தலையை திருப்பி, திருப்பி சைடு மிரர்களை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும், சைடு மிரர்களைவிட அளவில் அடக்கமாக இந்த கேமரா அமைப்பு இருப்பதால் நெருக்கடியான இடங்களிலும் சைடு மிரர்கள் பிற வாகனங்களுடன் சைடு மிரர்கள் உரசும் பிரச்னையை தவிர்க்க முடியும்.
சில நிறுவனங்கள் மட்டுமே இந்த புதிய சைடு கேமரா அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த புதிய சைடு கேமரா பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருக்கும். எனினும், இதனை காரில் பொருத்துவதற்கு அனைத்து நாட்டு மோட்டார் வாகன விதியில் உரிய திருத்தமும், அரசின் அனுமதியும் பெற வேண்டி இருக்கும்.
ஹூண்டாய், கியா, ஜெனிசிஸ் உள்ளிட்ட சொந்த கார் பிராண்டுகளுக்கு தவிர்த்து, பிற கார் நிறுவனங்களுக்கும் இந்த புதிய சைடு கேமரா அமைப்பை சப்ளை செய்வதற்கு ஹூண்டாய் மொபிஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. புதிய தலைமுறை ஹூண்டாய், கியா, ஜெனிசிஸ் கார்களில் இந்த சைடு கேமரா அமைப்பு இடம்பெறும் என்று ஹூண்டாய் மொபிஸ் தெரிவித்துள்ளது.
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!