Just In
- 13 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 32 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 3 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
Don't Miss!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!
பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் N என்ற பிரத்யேக பிராண்டில் செயல்திறன் மிக்க கார்களை விற்பனை செய்து வருகிறது.
அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது சொகுசு கார்களின் அதிசெயல்திறன் மிக்க மாடல்களை ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்வது போன்றே, ஹூண்டாய் நிறுவனம் என் பிராண்டில் தனது செயல்திறன் மிக்க கார்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் செயல்திறன் மிக்க கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து வர்த்தக விரிவாக்க முயற்சியாக என் பிராண்டில் தனது செயல்திறன் மிக்க கார்களை விரைவில் இந்தியாவில் களமிறக்குவதற்கான முயற்சிகளை ஹூண்டாய் மேற்கொண்டுள்ளதாக கார்அண்ட்பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஹூண்டாய் என் பிராண்டில் வர இருக்கும் புதிய கார்கள் சாதாரண கார் மாடல்களைவிட தோற்றத்தில் மிக வசீகரமாகவும், சற்றே கூடுதல் செயல்திறன் பெற்றதாகவும் இருக்கும். அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி அளவுக்கு மிக அதீத செயல்திறன் பெற்ற மாடல்களாக இருக்காது.
ஆனால், சிறப்பு ஆக்சஸெரீகளுடன் வெகுவாக கவரும் வகையில் தோற்றத்துடன் இந்த கார்கள் வர இருக்கின்றன. ஏற்கனவே, என் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக வாடிக்கையாளர் சிலரிடம் கருத்துக் கேட்பு படலத்தையும் நிகழ்த்தி இருக்கிறது ஹூண்டாய்.
இதில், சாதகமான முடிவுகள் கிடைத்ததையடுத்து, திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. முதல் மாடலாக ஹூண்டாய் ஐ30 என் கார் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 278.8 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த செயல்திறன் மிக்க ஹேட்ச்பேக் கார் மாடலானது 0 -100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் வரும் 2020ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் என் பிராண்டு மாடல்கள் என் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் என் லைன் என்ற இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஐ30 மற்றும் டூஸான் ஆகிய இரண்டு கார்களின் என் பிராண்டு கார்கள் விற்பனையில் உள்ளன. இந்த இரண்டு மாடல்களுமே இந்தியாவிற்கு சாத்தியமானதாக கருதப்படுகிறது.