Just In
- 31 min ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 40 min ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 3 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 3 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்திய மோட்டார் பந்தய உலகின் மூத்த புகைப்பட கலைஞர் ஜார்ஜ் மறைவு!
இந்திய மோட்டார் பந்தய உலகின் மூத்த புகைப்பட கலைஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் (57) நேற்று சென்னையில் காலமானார்.
பாதிரியாராக சேவை செய்ய விருப்பம் கொண்டிருந்த அவர் மோட்டார் பந்தயங்களின் மீதான ஈர்ப்பால் தனது முடிவை மாற்றிக் கொண்டார். கடந்த 1984ம் ஆண்டு சோழவரம் கார் பந்தயத்தின் மூலமாக மோட்டார் பந்தய துறையில் புகைப்பட கலைஞராக தனது புதிய அத்யாயத்தை துவங்கினார்.
அவரது அதீத ஈடுபாடு காரணமாக, இந்த துறையின் மிகச் சிறந்த புகைப்பட கலைஞராக பரிணமித்தார் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் எடுத்த மோட்டார் பந்தய படங்கள் நாட்டின் முன்னணி பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.
மேலும், பல வீரர்கள் மற்றும் ரசிகர்களின் வீட்டு வரவேற்பை, படுக்கை அறையை அலங்கரிக்கவும் செய்து வருகிறது. இவர் எடுக்கும் புகைப்படங்களை பெறுவதற்கு முன்னணி பத்திரிக்கைகள் போட்டா போட்டி போடுவதுண்டு. அந்த அளவிற்கு தொழில் நேர்த்தி கலைஞராக விளங்கியவர். மேலும், புகைப்படம் எடுப்பதற்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயங்காதவர்.
பல முறை வாகனங்களின் கூரைகளிலும், ராலி பந்தயங்களின்போது நடந்த பல கிலோமீட்டர் தூரம் சென்று பல்வேறு புதிய கோணங்களில் படமெடுத்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது படங்கள் மோட்டார் பந்தய ஆர்வலர்கள் மற்றும் வீரர்களின் வீட்டில் பொக்கிஷமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த எம்ஆர்எஃப் சேலஞ்ச் பந்தயம்தான் இவரது கடைசி பணியாக குறிப்பிடப்படுகிறது. உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.
ஜார்ஜ் பிரான்சிஸ் மறைந்தாலும், அவர் எடுத்த நேர்த்தியான மோட்டார் பந்தய படங்கள் காலத்தால் அழியாத வகையில் பந்தய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருக்கும். மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அவரது மரணம் பார்க்கப்படுகிறது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!