Just In
- 18 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி... இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை உருவாக்கிய மஹிந்திரா...
மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் முதல் பெண்கள் தொழிற்சாலையை மிக உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் இயங்கும் புகழ்வாய்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம், பெண்களால் மட்டுமே இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் தொழிற்சாலையை திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொழிற்சாலை ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நிறுவப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பெண்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்க இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம், மேற்கொண்டிருக்கும் இதுபோன்ற நடவடிக்கையை வெறெந்த நிறுவனமும் இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆட்டோ மொபைல் துறையில் பெண்களின் பங்கினை அதிகரிக்க வைக்கும் ஓர் முயற்சியாக அந்நிறுவனம் இதனை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து, பெண்களை அனைத்து துறையில் ஈடுபடுத்தும் விதமாக இதனை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு 'பிங்க் காலர்ஸ்' என்ற பெயரை அது வைத்துள்ளது.
இதனை 9 பெண்களைக் கொண்ட குழுக்கள் கட்டுபடுத்தப்பட இருக்கின்றனர். மேலும், மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட இரு வழி திட்டத்தின் மூலம் இந்த சேவைகள் திட்டமிடப்பட்டு செய்யப்பட இருக்கின்றது. இதற்காக மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான கல்யாண் மோட்டார்ஸை அது பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றது.
அந்தவகையில், புதிதாக மஹிந்திரா நிறுவனம் தொடங்க இருக்கும் இந்த தொழிற்சாலையில் சர்வீஸ் அட்வைசர் முதல் டிரைவர், மேனேஜர் மற்றும் காவலாளி என திரும்பிப் பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் பெண் பணியாளர்கள் மட்டுமே காட்சியளிப்பர். ஆகையால், இங்கு ஆண்களுக்கு துளியளவும் பணியிருக்காது.
இதுகுறித்து, மஹிந்திரா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் துறையின் மூத்த அதிகாரி வீஜே ராம் நக்ரா கூறியதாவது, "இந்தியாவின் முதல் பெண் பணியாளர் ஆட்டோ ஒர்க்சாப்பை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமைக் கொள்கின்றோம். இது முழுக்க முழுக்க பெண் பணியாளர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க இருக்கின்றது. ஆண்களுக்கு அங்கு இடமே இல்லை. பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும் ஓர் முயற்சியாக இதை நாங்கள் செய்துள்ளோம்" என்றார்.
பெண்கள் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த சர்வீஸ் ஆலையில் செய்யப்படும் சேவைகளுக்கு 'காம்பேக்ட் க்விக்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சேவை நிலையங்களுக்கு தேவையான பெண் பணியாளர்களை, மஹிந்திரா நிறுவனம் அதன் டீலர்கள் வாயிலாக பணியமர்த்த இருக்கின்றது.
இதற்காக தொழில்நுட்பம் மற்றும் பணி சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் சிறப்பு வகுப்புகள் மூலம் பெண்களுக்கு வழங்கவும் மஹிந்திரா திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான கட்டணமும் தள்ளுபடிச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொழிற்சாலையை திறப்பதற்கான அனைத்து பணிகளையும் அது நிறைவு செய்துவிட்டது.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!