Just In
- 1 hr ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 2 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 2 hrs ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Movies Baakiyalakshmi: பாக்கியா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திரும்ப திரும்ப கேட்ட பழனிச்சாமி!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திடீரென உருவான சிக்கல்... லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் மோடி பதற்றம் அடைய காரணம் இதுதான்...
லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை திடீரென பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த பிரச்னையை அவர் சமாளிக்காவிட்டால், ஆட்சியை இழக்க வேண்டியதிருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்று கொண்டது. ஆனால் அதன்பின்பு மத்திய அரசு செயல்படுத்திய பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்கள், பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கின.
இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது.
குறிப்பாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உள்பட நாட்டின் ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை வரலாற்றில் முதல் முறையாக 90 ரூபாயை கடந்தது. அத்துடன் டீசல் விலையிலும் பல்வேறு விபரீதங்கள் அரங்கேறின.
பொதுவாக இந்தியாவில் பெட்ரோலின் விலையை காட்டிலும் டீசலின் விலை சுமார் 10 ரூபாய்கள் வரை குறைவாகதான் இருக்கும். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோலின் விலையை விட டீசலின் விலை அதிகம் ஆனது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்தான்.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த விபரீதம் அரங்கேறியது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய முக்கிய எரிபொருட்களின் இத்தகைய விலை உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.
சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.
ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிரதமர் மோடி எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததற்கு, மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பும் முக்கிய காரணம்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசுகளின் வாட் வரி என பல்வேறு வரிகள் மிக அதிகப்படியாக விதிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர இதுவும் மிக முக்கியமான காரணம்.
எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஏனெனில் ஜிஎஸ்டி-யில் ஒரே ஒரு வரி மட்டுமே என்பதால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் நாடு முழுவதும் பரவலாக எழுந்த இந்த கோரிக்கை தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை. வரிகள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருவாயை இழந்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்காததால் பிரதமர் மோடி மீது கடுமையான அதிருப்தி உருவானது. சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ பெட்ரோல், டீசல் விலை உயர்வும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சியை பிடித்தன. ஆக மொத்தம் 5 மாநிலங்களில் ஒன்றில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.
இந்த சூழலில் மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில், நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தலை போல், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வி விட கூடாது என பாஜக நினைக்கிறது.
எனவே மக்கள் மத்தியில் மீண்டும் நற்பெயரை பெற பாஜக முயன்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் முன்பு இருந்ததை காட்டிலும் பெட்ரோல், டீசல் விலை ஓரளவிற்கு குறைந்தது.
தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (ஜனவரி 14) ஒரு லிட்டர் பெட்ரோல் 72.79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 67.78 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்த விலையை காட்டிலும் இது குறைவுதான் என்றாலும் கூட, பொதுவாக பார்க்கையில் தற்போது இருப்பது மிக அதிகமான விலைதான் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது இருப்பதை காட்டிலும் பெட்ரோல், டீசலின் விலையை இன்னும் குறைத்தாக வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் எரிபொருள் தேவை தற்போது அதிகரித்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையானது, 18.51 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால், வருங்காலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயரக்கூடிய அபாயம் நிலவுகிறது. ஒருவேளை தற்போது இருப்பதை காட்டிலும் பெட்ரோல், டீசலின் விலை இன்னும் அதிகமானால், லோக்சபா தேர்தலில் மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே இந்த பிரச்னையை மத்திய அரசு எப்படி கையாள போகிறது? என்பதை எதிர்கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளன. ஏனெனில் மத்திய அரசு இந்த பிரச்னையை திறம்பட கையாளாவிட்டால், எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் தேர்தல் சமயத்தில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அதன் விலையை வெகுவாக குறைக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்