Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Movies அட செம சிம்ப்பிளா இருக்காங்களே.. மகன்களுடன் நயன்தாரா செஞ்ச செயலை பாருங்க
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போக்குவரத்து விதிமீறுவோருக்கு அடுத்த ஆப்பு ரெடியாகிறது!
போக்குவரத்து விதிமீறலை தடுக்கும் விதமாக, புதிய அபாரதத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இது பெரும் களேபரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறலை தடுக்க அடுத்த திட்டமும் தயாராகி வருகிறது.
புதிய அபாரத் தொகை மூலமாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறலை தடுப்பதற்கான அடுத்த அஸ்திரத்தையும் மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
அதன்படி, வாகனங்களின் காப்பீட்டு கணக்கையும், போக்குவரத்து போலீசாரின் வாகனத் தணிக்கை விபரங்களையும் ஆன்லைன் முறையில் இணைப்பதற்கான முயற்சிகளை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு முகமை (IRDA) மேற்கொண்டுள்ளது.
இதனை நடைமுறை சாத்தியப்படுத்துவற்காக ஆய்வு செய்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக சிறப்பு குழுவையும் ஐஆர்டிஏ நியமித்துள்ளது. மேலும், ஏற்கனவே இருக்கும் இணையதள தகவல் பரிமாற்ற முறையையும் மேம்படுத்தி, இந்த புதிய நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் ஐஆர்டிஏ மேற்கொண்டுள்ளது.
விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த போக்குவரத்து போலீசாரின் கணிணி பதிவேடுகளையும், காப்பீட்டு கணக்கையும் இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் ஜாதகமே ஐஆர்டிஏ.,வின் புதிய சாஃப்ட்வேருடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
இதன்படி, விதிமீறலில் ஈடுபடும் உரிமையாளர் தனது வாகனத்தின் காப்பீட்டை புதுப்பிக்கும்போது, விதிமீறல்களின் எண்ணிக்கை இதர விஷயங்களை கணக்கில் வைத்து வாகன உரிமையாளருக்கு தர மதிப்பீடு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் காப்பீட்டு பிரிமீயத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும்.
வெளிநாடுகளில் இதேபோன்ற நடைமுறை அமலில் உள்ளது. அதிகமாக விதிமீறலில் வாகன உரிமையாளர்கள் காப்பீட்டை புதுப்பிக்கும்போது மிக அதிக பிரிமீயத்தை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, விதிமீறல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு இருப்பதாக ஐஆர்டிஏ அமைப்பு கருதுகிறது.
மேலும், டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்தியத்தில் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த ஐஆர்டிஏ அமைப்பு முடிவு செய்துள்ளது. இது வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த ஐஆர்டிஏ திட்டமிட்டுள்ளது.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!