Just In
- 2 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 3 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 3 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 8 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்
கர்நாடக முதல்வர் குமாரசாமி கார் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. அது என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். அவரிடம் மிகவும் விலை உயர்ந்த ஹை-எண்ட் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்று உள்ளது.
இந்த காரைதான் அவர் தனது தினசரி பயன்பாட்டிற்கு உபயோகித்து வருகிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ரேஞ்ச் ரோவர் காரானது, கஸ்தூரி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்த கார் இரண்டு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளது.
பெங்களூரில் உள்ள சதாசிவநகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று, இதன் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே காரை ஓட்டிச்சென்றுள்ளார். இதன்பின் கடந்த பிப்ரவரி 22ம் தேதியன்று, பெங்களூர் பசவேஸ்வரா சர்க்கிள் பகுதியில், இந்த கார் அதிவேகத்தில் சென்றுள்ளது.
இந்த 2 போக்குவரத்து விதிமுறை மீறல்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கார் பதிவு செய்யப்பட்டுள்ள கஸ்தூரி மீடியா பிரைவேட் லிமிடெட்டிற்கு 2 நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டு விட்டன. இதற்கான மொத்த அபராதம் 600 ரூபாய். ஆனால் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி இன்னும் அபராத தொகை செலுத்தப்படவில்லை.
இந்த போக்குவரத்து விதிமீறல்களுக்கான ஆட்டோமேட்டட் சலான்கள் (Automated Challans) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெனரேட் ஆகியுள்ளது. சலான்கள் ஜெனரேட் ஆன அடுத்த ஏழு நாட்களுக்கு உள்ளாக அபராத தொகை செலுத்தப்பட வேண்டும். ஆனால் இன்னும் செலுத்தப்படவில்லை.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வருக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் எங்கும் தப்பித்து விடாது. அவர்கள் தாமாக முன்வந்து செலுத்த தவறினால், அபராத தொகையை நாங்கள் விரைவில் வசூலிப்போம். ஏறத்தாழ இந்த காரை தினந்தோறும் விதான் சவுதாவிற்கு (கர்நாடக மாநில சட்டப்பேரவை) முன்பாக பார்க்க முடியும்.
எனவே அடுத்த முறை நாங்கள் காரை பார்க்கும்போது கண்டிப்பாக அபராத தொகையை வசூலிப்போம் என்றார். ஆனால் விதான் சவுதாவிற்கு முன்பாக ஏறக்குறைய தினந்தோறும் இந்த காரை காண நேரிட்டாலும், ஏன் இன்னும் அபராத தொகை வசூலிக்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!