Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!
தந்தை-மகன் இருவரும் ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. எதற்காக கேக் வெட்டப்பட்டது என்பதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.
பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் அதிக வைரலாவதில்லை, ஒரு சில வீடியோக்களை தவிர. அந்தவகையில், மனிதர்களுக்காவும், விலங்குகளுக்காவும் கொண்டாடப்பட்ட வீடிோக்களின் ராஜ்யமே இணையத்தில் உள்ளது. இதனையே நாம் அதிகம் பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது பலர் பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஓர் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. அதுகுறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்டோடி குடும்பத்தினர். இவர்கள் கடந்த 50ம் ஆண்டுகளாக மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் சிஜே3பி என்ற மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஜீப்பை அவர்கள் வாங்கி கடந்த 2ம் தேதியுடன் 50 ஆண்டுகளாகி இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், அத்தினத்தை சிறப்பிக்க எண்ணிய அக்குடும்பத்தினர், ஜீப்பிற்கு கேக் வெட்டி, சுற்றத்தாருக்கு இனிப்பு வழங்கி, அவர்களின் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோவினை அக்குடும்பத்தினரே முன்டோடி வ்ளாக்ஸ் என்ற யுடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், முதலில் அவர்களை பற்றி அறிமுகம் செய்துக்கொள்ளும் அக்குடும்பத்தினர், தொடர்ந்து சிஜே 3பி ஜீப் பற்றிய சுவார்ஷ்ய தகவலை அளிக்கின்றனர்.
வீடியோவில் நாம் காணும் ஜீப்பின் நிறம் உண்மையான நிறம் அல்ல. அந்த ஜீப்பை நல்ல முறையில் பாதுகாக்கும் விதத்தில் ஜீப்பிற்கு 16 காவுஜ் மெட்டல் ஷீட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, அதற்கு சிவப்பு நிறமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஜீப்பின் வீல்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிதாக ஆறு ஸ்போக்குகள் கொண்ட வீல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஜீப் மீது அவர்கள் கொண்ட தனிப்பட்ட அக்கறையின் காரணமாக அந்த கார் தற்போதும் புத்தம் புதிய ஜீப்பினை போன்று காட்சியளிக்கின்றது.
மஹிந்திரா ஜீப் சிஜே 3பி ஓர் 4X4 எஸ்யூவி ரகம் ஆகும். இந்த கார் ஆப் மற்றும் ஆன் ரோடில் பயன்படும் வகையில் வசதிகளைப் பெற்றுள்ளது. இந்த ஜீப்பில் 3-ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் காணப்படுகின்றது. இவை லோ ரேஷியோ கியர்பாக்ஸ் ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் தற்போது தார் என்ற பெயரில் இதுபோன்ற ஜீப்களை தயாரித்து வருகின்றது. இதன் அடுத்த தலைமுறை தார் வருகின்ற 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தார் வாகனத்துடன் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட மாடல்களையும் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.