Just In
- 4 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
குட் நியூஸ்... கியா கார்னிவல் அறிமுக விபரம் வெளியானது!
இந்தியாவின் எம்பிவி மார்க்கெட்டை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆண்டு வருகிறது. இதற்கு இணையான அம்சங்கள் கொண்ட நேரடி போட்டி மாடல் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட பிரிமீயமான எம்பிவி கார் மாடலை கியா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
கியா கார்னிவல் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எம்பிவி கார் வருகை குறித்த தகவல் இந்தியர்களிடம் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட அதிக இடவசதி மற்றும் பிரிமீயம் அம்சங்களுடன் இந்த கார் வர இருப்பதால் நாளுக்கு நாள் இந்த கார் குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது.
அடுத்த மாதம் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரண்டாவது மாடலாக கியா கார்னிவல் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், கார்னிவல் எம்பிவி காரை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருக்கும் கார்னிவல் எம்பிவி கார் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு மாற்றங்களை செய்து புதுப்பொலிவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் கியா கார்னிவல் எம்பிவி கார் 7 சீட்டர், 9 சீட்டர் மற்றும் 11 சீட்டர் என்ற மூன்றுவிதமான இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 7 சீட்டர் மாடலில் மட்டுமே அதிக வசதிகள் கொண்ட ஒரே வேரியண்ட்டாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கியா கார்னிவல் எம்பிவி கார் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும்.
புதிய கியா கார்னிவல் காரில் எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் கேப்டன் தனித்தனியான கேப்டன் இருக்கைகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிறப்பான ஏசி சிஸ்டம் ஆகியவை இடம்பெற இருக்கின்றன.
இந்த காரில் பல்முனை பாதுகாப்புக்காக அதிக ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.
கியா கார்னிவல் எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 202 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். வெளிநாடுகளில் 3.2 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. ஆனால், இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பில்லை.
புதிய கியா கார்னிவல் எம்பிவி கார் ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரைவிட விலை அதிகம் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும் என்ற தகவலும் உள்ளது.
Source: Carwale
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!