Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம
கியா செல்டோஸின் காத்திருப்பு காலம் மிக விரைவில் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக வாகனங்களின் தயாரிப்புகளை அதிகரிக்க ஆந்திராவில் உள்ள ஆனந்தபூர் தொழிற்சாலையில் இரண்டாவது ஷிஃப்ட்டை கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த வேலை நேரம் அதிகரிப்பால் இந்நிறுவனம் தயாரிப்பு வாகனங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 15,000 யூனிட்கள் என அதிகரித்துள்ளது. 1000 புதிய பணியாளர்கள் இந்த இரண்டாவது ஷிஃப்ட்டிற்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கியா மோட்டார்ஸிற்கு தேவைப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இந்திய மார்கெட்டில் வெகுவாக குறைந்து வருகிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் காருக்காக 60,000 முன்பதிவுகளை ஏற்று கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த செல்டோஸ் கார், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி மிக விரைவில் இந்தியாவில் சிறந்த முறையில் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற பாராட்டை பெற்றுள்ளது.
இந்த இரண்டாவது ஷிஃப்ட் துவக்கத்தால் வாகனங்களின் தயாரிப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலமும் குறையும். இதனால் செல்டோஸ் காருக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயரும் என கியா நிறுவனம் நம்புகிறது.
கியா நிறுவனம் இரண்டாவது ஷிஃப்ட்டை துவங்குவதற்கு இன்னொரு காரணம், மூன்றாவது ஷிஃப்ட் வேலைக்கான அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக கூட தான். மேலும் இந்நிறுவனம் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது தயாரிப்பு வாகனங்களாக கார்னிவல் எம்பிவி மற்றும் புதிய 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவி மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த இரு மாடல்களும் இந்தியா மார்கெட்டில் அறிமுகமாவதற்குள் தற்சமயம் வருடத்திற்கு 3 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் ஆனந்தபூர் தொழிற்சாலையை ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாற்ற வேண்டும் என்பது தான் கியா மோட்டார்ஸின் நோக்கம்.
இதில் கியா கார்னிவல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவி கார் சிறிது காலம் கழித்து, அதாவது 2020 ஜூலையில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதனை கியா மோட்டார்ஸ் நிறுவனமே செல்டோஸ் மாடல் அறிமுகத்திற்கு முன்னர், இந்த புதிய மாடல் (செல்டோஸ்) வெளியான பின்பு அடுத்த 3 வருடங்களில் இந்தியாவில் ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் எங்களது புதிய தயாரிப்பு மாடல் வெளியாகும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கியா செல்டோஸ், கார்னிவல் மற்றும் 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவி ஆகிய மூன்று மாடல்களும் ஒரே திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களின்படி, செல்டோஸ் மாடல் வாடிக்கையாளர்களிடையே மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், புதிய 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய எஸ்யூவியை வேகமாக தயாரித்து அறிவிக்கப்பட்டதற்கு சில மாதங்களுக்கு முன்பே வெளியிடும் திட்டமும் கியா நிறுவனத்திடம் உள்ளதாம்.
இதுகுறித்து கியா மோட்டார்ஸின் சேல்ஸ்& மார்கெட்டிங் துணை முதன்மை அதிகாரி மனோகர் பாட் கூறுகையில், விற்பனையாளர்கள், இந்திய சந்தையை மறு ஒழுங்கமைத்தல் மற்றும் உலகளாவிய விற்பனையுடன் இந்திய விற்பனையை தொடர்வது போன்ற செயல்பாடுகளால் வாகனங்களில் தயாரிப்பை அதிகரிப்பது சிக்கலான செயல்முறையாக உள்ளது. இருப்பினும் நாங்கள் விற்பனை வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இந்தியா எங்களுக்கு ஏற்ற மிக பெரிய சக்தியை வெளிப்படுத்தியுள்ளது என கூறினார்.
கியா மோட்டார்ஸின் இந்த தயாரிப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியால் முன்பதிவு கார்களுக்கான காத்திருப்பு காலம் விரைவில் குறையவுள்ளது. இதனால் செல்டோஸ் மாடலின் விற்பனை யூனிட்களும் விரைவில் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதையெல்லாம் விட போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் விரைவில் வெளியாகவுள்ள எஸ்யூவி காரின் விற்பனையை எவ்வாறு இந்நிறுவனம் கையாள போகிறது என்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது.