Just In
- 3 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 3 hrs ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
Don't Miss!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்
செல்போனில் பேசியபடி அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவரை சினிமா பாணியில் விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்க முடியாமல் திரும்பியுள்ளார் ஆர்டிஓ. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நபர்களிடம், செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் கூட செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் காணப்படுகிறது.
பயணிகளின் உயிருக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணராமல் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்களும் செல்போனில் பேசி கொண்டே பஸ்ஸை ஓட்டுகின்றனர். இந்த சூழலில் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC- Kerala State Road Transport Corporation) சொந்தமான பஸ் ஒன்றை அதன் டிரைவர் செல்போனில் பேசியபடியே ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது இதனை கவனித்த கேரள மாநில மோட்டார் வாகன துறை அதிகாரிகள், சினிமா பாணியில் அந்த பஸ்ஸை விரட்டினர். இதன் பயணாக அந்த பஸ்ஸை ஒரு வழியாக அவர்கள் நிறுத்தியும் விட்டனர். ஆனால் செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு அவர்களால் அபராதம் எதுவும் விதிக்க முடியவில்லை.
கேரள உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புதான் இதற்கு காரணம். இதனை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான். செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக ஆர்டிஓவால் (RTO) வெறுமனே நோட்டீஸ் மட்டுமே வழங்க முடிந்தது. இது ஏன்? என்பதை இனி பார்க்கலாம்.
கேரள உயர் நீதிமன்றமானது, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அதில், ''பொதுமக்கள் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காதவரை, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றமல்ல'' என கூறப்பட்டிருந்தது. அத்துடன் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தற்போதைய சட்டத்தில் எவ்வித ஏற்பாடும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் கூறியது பின்வருமாறு: செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என இந்த நீதிமன்றம் கூறவில்லை. அதனை மறுக்க முடியாது. ஆனால் வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் செல்போனில் பேசுவதை தடை செய்ய போலீஸ் சட்டத்தில் எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. எனவே செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருதும் வகையில், போலீஸ் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சட்டசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் காரணமாகதான் செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு, நோட்டீஸ் வழங்குவதை தவிர ஆர்டிஓவால் வேறு எந்த தண்டனையையும் கொடுக்க முடியவில்லை. செல்போனில் பேசிக்கொண்டிருக்கையில், அந்த டிரைவர் கட்டுப்பாட்டை இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இது தொடர்பாக புனலூர் நியூஸ் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதே நிலை நீடித்தால், வாகன ஓட்டிகள் துளி கூட அச்சமின்றி செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவார்கள். சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது வழிவகுத்து விடும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களால், அவர்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை. இதர வாகன ஓட்டிகளும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தில் கேரள அரசு தலையிட்டு, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றம் என்பதை உறுதி செய்யும் வகையில், பொருத்தமான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் என நம்புவோம்.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்