Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவரை விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்காத ஆர்டிஓ... காரணம் இதுதான்
செல்போனில் பேசியபடி அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவரை சினிமா பாணியில் விரட்டி பிடித்தும் அபராதம் விதிக்க முடியாமல் திரும்பியுள்ளார் ஆர்டிஓ. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான நபர்களிடம், செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் கூட செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் வழக்கம் காணப்படுகிறது.
பயணிகளின் உயிருக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணராமல் சில அரசு, தனியார் பஸ் டிரைவர்களும் செல்போனில் பேசி கொண்டே பஸ்ஸை ஓட்டுகின்றனர். இந்த சூழலில் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC- Kerala State Road Transport Corporation) சொந்தமான பஸ் ஒன்றை அதன் டிரைவர் செல்போனில் பேசியபடியே ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது இதனை கவனித்த கேரள மாநில மோட்டார் வாகன துறை அதிகாரிகள், சினிமா பாணியில் அந்த பஸ்ஸை விரட்டினர். இதன் பயணாக அந்த பஸ்ஸை ஒரு வழியாக அவர்கள் நிறுத்தியும் விட்டனர். ஆனால் செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு அவர்களால் அபராதம் எதுவும் விதிக்க முடியவில்லை.
கேரள உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புதான் இதற்கு காரணம். இதனை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான். செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக ஆர்டிஓவால் (RTO) வெறுமனே நோட்டீஸ் மட்டுமே வழங்க முடிந்தது. இது ஏன்? என்பதை இனி பார்க்கலாம்.
கேரள உயர் நீதிமன்றமானது, கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அதில், ''பொதுமக்கள் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காதவரை, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றமல்ல'' என கூறப்பட்டிருந்தது. அத்துடன் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தற்போதைய சட்டத்தில் எவ்வித ஏற்பாடும் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் கூறியது பின்வருமாறு: செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என இந்த நீதிமன்றம் கூறவில்லை. அதனை மறுக்க முடியாது. ஆனால் வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் செல்போனில் பேசுவதை தடை செய்ய போலீஸ் சட்டத்தில் எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. எனவே செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருதும் வகையில், போலீஸ் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சட்டசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் காரணமாகதான் செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவருக்கு, நோட்டீஸ் வழங்குவதை தவிர ஆர்டிஓவால் வேறு எந்த தண்டனையையும் கொடுக்க முடியவில்லை. செல்போனில் பேசிக்கொண்டிருக்கையில், அந்த டிரைவர் கட்டுப்பாட்டை இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இது தொடர்பாக புனலூர் நியூஸ் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதே நிலை நீடித்தால், வாகன ஓட்டிகள் துளி கூட அச்சமின்றி செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவார்கள். சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது வழிவகுத்து விடும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களால், அவர்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை. இதர வாகன ஓட்டிகளும் சேர்ந்தே பாதிக்கப்படுவார்கள்.
இந்த விவகாரத்தில் கேரள அரசு தலையிட்டு, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றம் என்பதை உறுதி செய்யும் வகையில், பொருத்தமான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் என நம்புவோம்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!