Just In
- 21 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 4 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 6 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜீப் மற்றும் ஃபியட் கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்
ஜீப் காம்பஸ் உள்ளிட்ட ஃபியட் க்றைஸ்லர் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய கார் சந்தையில் பல புதிய திட்டங்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய கார்களை சொந்தமாக வாங்குவதற்கு பதிலாக குத்தகை அடிப்படையில் சில ஆண்டுகள் வாங்கி பயன்படுத்தும் திட்டம் டிரென்ட் ஆகி வருகிறது.
இதனை மனதில் வைத்து மஹிந்திரா, ஸ்கோடா, ஹூண்டாய் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை அண்மையில் அறிவித்தன. மேலும், எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் சிட்ரோன் ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் கார்களை அறிமுகம் செய்யும்போதே, குத்தகை திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த வரிசையில், ஃபியட் க்றைஸ்லர் இந்தியா குழுமம் தற்போது குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜீப் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஜீப் மற்றும் ஃபியட் கார்களை குத்தகை அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பெற்று பயன்படுத்த முடியும்.
டவுண்பேமண்ட் உள்ளிட்டவை இல்லாமல் குறிப்பிட்ட மாதாந்திர கட்டணத்தை செலுத்தி இந்த குத்தகை திட்டத்தில் புதிய கார்களை எடுத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்து குறுகிய காலம் தங்கி செல்வோர் மற்றும் அடிக்கடி புதிய கார்களை மாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஓரிக்ஸ் நிறுவனத்துடன் ஃபியட் க்றைஸ்லர் இந்தியா குழுமம் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது. இதே நிறுவனம்தான் மஹிந்திரா, ஸ்கோடா கார்களின் குத்தகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
தற்போது கார்ப்பரேட் மற்றும் தொழிலதிபர்கள் அளவில் இந்த திட்டம் பிரபலமாக உள்ளது. இதனை சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டு செல்லும் நோக்கோடு செயல்பட்டு வருவதாக ஓரிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த குத்தகை திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை கார்களை எடுத்து பயன்படுத்தலாம்.
புதிய காரை கடனில் வாங்கும்போது கொடுக்கும் மாதத் தவணையை விட குத்தகை திட்டத்திற்கான மாதாந்திர கட்டணம் அதிகமாக இருக்கும். ஆனால், டவுன்பேமண்ட், பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்களை வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது.
முதல் கட்டமாக ஃபியட் க்றைஸ்லர் நிறுவனத்தின் குத்தகை திட்டமானது மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிற நகரங்களிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!