மாணவர்கள் மீது திடீரென காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மீது திடீரென காரை ஏற்றினார். இதனால் 8 மாணவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள பன்டோல் பகுதியில், ஜர்டாரா அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து கொண்டிருக்கும் இப்பள்ளியில், கிருஷ்ண குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த சூழலில் நாட்டின் குடியரசு தினம் நேற்று முன் தினம் (ஜனவரி 26ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன்படி ஜர்டாரா அரசு தொடக்க பள்ளியிலும் குடியரசு தின விழா நடைபெற்றது.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இடையே பள்ளியின் உணவு கூடத்திற்கு அருகில் மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் கிருஷ்ண குமார் தனது காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் திடீரென தாறுமாறாக ஓடிய அந்த கார் அங்கிருந்த மாணவர்கள் மீது மோதியது. இதில், மொத்தம் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று மாணவர்களை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

படுகாயம் அடைந்த 8 மாணவர்களில் 3 பேர் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளனர். எனவே மேல் சிகிச்சைக்காக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எஞ்சிய 5 மாணவர்களுக்கு சியோனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆசிரியர் கிருஷ்ண குமார் ஓட்டி வந்த கார், மாணவர்கள் மீது மோதியது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

சம்பவத்தன்று ஆசிரியர் கிருஷ்ண குமார் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கியுள்ளது. எனவே ஆசிரியர் கிருஷ்ண குமார் பிரேக் (Brake) பிடித்து காரை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அதற்கு பதிலாக ஆக்ஸலரேட்டரை (Accelerator) அழுத்தியுள்ளார். இதனால் கார் இன்னும் தாறுமாறாக ஓடி, மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. ஆசிரியர் கிருஷ்ண குமார் பதற்றத்தின் காரணமாகவே பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸலரேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இருந்தபோதும் அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் படுகாயமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எனவே கவன குறைவாக செயல்பட்ட ஆசிரியர் கிருஷ்ண குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்த தொடங்கினர். இதன்பேரில் ஆசிரியர் கிருஷ்ண குமாரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதுதவிர அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

வாகனங்களை கூடுதல் கவனத்துடன் இயக்குவது அவசியம். குறிப்பாக கார்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் இதுபோன்ற மிக கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆக்ஸலரேட்டர், கிளட்ச் (Clutch) மற்றும் பிரேக் பெடல்கள் எது? எது? என்பதை நன்கு தெரிந்து கொண்ட பின்பே கார்களை இயக்க தொடங்க வேண்டும். பொதுவாக மேனுவல் வேரியண்ட் (Manual Variant) கார்களில்தான் ஆக்ஸலரேட்டர், கிளட்ச் மற்றும் பிரேக் என மூன்று பெடல்கள் இருக்கும்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அதாவது மேனுவல் வேரியண்ட் கார்களின் வலது பக்கத்தில் (Right Side) ஆக்ஸலரேட்டர் பெடல் அமைந்திருக்கும். இது கேஸ் பெடல் (Gas Pedal) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில், இடது பக்கத்தில் (Left Side) கிளட்ச் பெடல் கொடுக்கப்பட்டிருக்கும்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆக்ஸலரேட்டர் மற்றும் கிளட்ச் பெடல்களுக்கு இடையே பிரேக் பெடல் வழங்கப்பட்டிருக்கும். இதில், எஞ்சிய 2 பெடல்களை காட்டிலும் ஆக்ஸலரேட்டர் பெடல் சற்று பெரியதாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலமும் பெடல்களை சரியாக நினைவில் வைத்து கொள்ளலாம்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பொதுவாக மேனுவல் வேரியண்ட் கார்களில்தான் இந்த முறையில் பெடல்கள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் (Automatic Variant) கார்களில் பெடல்கள் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கும்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அதாவது ஆட்டோமெட்டிக் வேரியண்ட் கார்களில் 2 பெடல்கள் மட்டுமே இருக்கும். ஆட்டோமெட்டிக் வேரியண்ட் கார்களுக்கு கிளட்ச் பெடல் தேவைப்படாது. இதனால் இதில் கிளட்ச் பெடல் மட்டும் இடம்பெற்றிருக்காது.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எனவே ஆட்டோமெட்டிக் வேரியண்ட் கார்களில், ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் ஆகிய 2 பெடல்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். இதன்படி இந்த வகை கார்களின் வலது பக்கத்தில் ஆக்ஸலரேட்டர் பெடலும், இடது பக்கத்தில் பிரேக் பெடலும் இடம்பெற்றிருக்கும்.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்தியாவில் வலது பக்க டிரைவிங் கொண்ட கார்கள்தான் (Right-hand Drive Cars) உள்ளன. ஆனால் ஒரு சில வெளிநாடுகளில் இடது பக்க டிரைவிங் முறை கடைபிடிக்கப்படுகிறது. எனவே அங்கு இடது பக்க டிரைவிங் (Left-hand Drive Cars) கொண்ட கார்கள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் இடது பக்க டிரைவிங் கார்களிலும் பெடல் அமைப்பு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதாவது வலது பக்க டிரைவிங் கார்களை போலவே, இடது பக்க டிரைவிங் கார்களிலும் பெடல்கள் அமைப்பு முறை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மீது காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதனை புரிந்து கொண்டு கார்களை இயக்குவது நல்லது. பதற்றமான நேரங்களிலும் கூட பெடல்களை மாற்றி அழுத்தாமல், சரியாக அழுத்துவதற்கு ஏற்ப உரிய பயிற்சி எடுத்து கொண்டால், விபத்துக்களை தவிர்க்கலாம்.

Most Read Articles
English summary
Teacher Pressed Accelerator Instead Of Brake: Car Rams Into Students-Here Is Different Pedals In Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X