Just In
- 1 min ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 25 min ago ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
Don't Miss!
- Movies Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாணவர்கள் மீது திடீரென காரை ஏற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்... காரணம் தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் மீது திடீரென காரை ஏற்றினார். இதனால் 8 மாணவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையக்கூடும்.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள பன்டோல் பகுதியில், ஜர்டாரா அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து கொண்டிருக்கும் இப்பள்ளியில், கிருஷ்ண குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த சூழலில் நாட்டின் குடியரசு தினம் நேற்று முன் தினம் (ஜனவரி 26ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன்படி ஜர்டாரா அரசு தொடக்க பள்ளியிலும் குடியரசு தின விழா நடைபெற்றது.
இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இடையே பள்ளியின் உணவு கூடத்திற்கு அருகில் மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் கிருஷ்ண குமார் தனது காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென தாறுமாறாக ஓடிய அந்த கார் அங்கிருந்த மாணவர்கள் மீது மோதியது. இதில், மொத்தம் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று மாணவர்களை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
படுகாயம் அடைந்த 8 மாணவர்களில் 3 பேர் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளனர். எனவே மேல் சிகிச்சைக்காக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
எஞ்சிய 5 மாணவர்களுக்கு சியோனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆசிரியர் கிருஷ்ண குமார் ஓட்டி வந்த கார், மாணவர்கள் மீது மோதியது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
சம்பவத்தன்று ஆசிரியர் கிருஷ்ண குமார் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கியுள்ளது. எனவே ஆசிரியர் கிருஷ்ண குமார் பிரேக் (Brake) பிடித்து காரை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
அதற்கு பதிலாக ஆக்ஸலரேட்டரை (Accelerator) அழுத்தியுள்ளார். இதனால் கார் இன்னும் தாறுமாறாக ஓடி, மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. ஆசிரியர் கிருஷ்ண குமார் பதற்றத்தின் காரணமாகவே பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸலரேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது.
இருந்தபோதும் அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் படுகாயமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே கவன குறைவாக செயல்பட்ட ஆசிரியர் கிருஷ்ண குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வலியுறுத்த தொடங்கினர். இதன்பேரில் ஆசிரியர் கிருஷ்ண குமாரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதுதவிர அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
வாகனங்களை கூடுதல் கவனத்துடன் இயக்குவது அவசியம். குறிப்பாக கார்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் இதுபோன்ற மிக கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்.
ஆக்ஸலரேட்டர், கிளட்ச் (Clutch) மற்றும் பிரேக் பெடல்கள் எது? எது? என்பதை நன்கு தெரிந்து கொண்ட பின்பே கார்களை இயக்க தொடங்க வேண்டும். பொதுவாக மேனுவல் வேரியண்ட் (Manual Variant) கார்களில்தான் ஆக்ஸலரேட்டர், கிளட்ச் மற்றும் பிரேக் என மூன்று பெடல்கள் இருக்கும்.
அதாவது மேனுவல் வேரியண்ட் கார்களின் வலது பக்கத்தில் (Right Side) ஆக்ஸலரேட்டர் பெடல் அமைந்திருக்கும். இது கேஸ் பெடல் (Gas Pedal) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில், இடது பக்கத்தில் (Left Side) கிளட்ச் பெடல் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆக்ஸலரேட்டர் மற்றும் கிளட்ச் பெடல்களுக்கு இடையே பிரேக் பெடல் வழங்கப்பட்டிருக்கும். இதில், எஞ்சிய 2 பெடல்களை காட்டிலும் ஆக்ஸலரேட்டர் பெடல் சற்று பெரியதாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலமும் பெடல்களை சரியாக நினைவில் வைத்து கொள்ளலாம்.
பொதுவாக மேனுவல் வேரியண்ட் கார்களில்தான் இந்த முறையில் பெடல்கள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் (Automatic Variant) கார்களில் பெடல்கள் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கும்.
அதாவது ஆட்டோமெட்டிக் வேரியண்ட் கார்களில் 2 பெடல்கள் மட்டுமே இருக்கும். ஆட்டோமெட்டிக் வேரியண்ட் கார்களுக்கு கிளட்ச் பெடல் தேவைப்படாது. இதனால் இதில் கிளட்ச் பெடல் மட்டும் இடம்பெற்றிருக்காது.
எனவே ஆட்டோமெட்டிக் வேரியண்ட் கார்களில், ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் ஆகிய 2 பெடல்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். இதன்படி இந்த வகை கார்களின் வலது பக்கத்தில் ஆக்ஸலரேட்டர் பெடலும், இடது பக்கத்தில் பிரேக் பெடலும் இடம்பெற்றிருக்கும்.
இந்தியாவில் வலது பக்க டிரைவிங் கொண்ட கார்கள்தான் (Right-hand Drive Cars) உள்ளன. ஆனால் ஒரு சில வெளிநாடுகளில் இடது பக்க டிரைவிங் முறை கடைபிடிக்கப்படுகிறது. எனவே அங்கு இடது பக்க டிரைவிங் (Left-hand Drive Cars) கொண்ட கார்கள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால் இடது பக்க டிரைவிங் கார்களிலும் பெடல் அமைப்பு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதாவது வலது பக்க டிரைவிங் கார்களை போலவே, இடது பக்க டிரைவிங் கார்களிலும் பெடல்கள் அமைப்பு முறை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை புரிந்து கொண்டு கார்களை இயக்குவது நல்லது. பதற்றமான நேரங்களிலும் கூட பெடல்களை மாற்றி அழுத்தாமல், சரியாக அழுத்துவதற்கு ஏற்ப உரிய பயிற்சி எடுத்து கொண்டால், விபத்துக்களை தவிர்க்கலாம்.
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!