Just In
- 3 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 4 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மஹிந்திரா- ஃபோர்டு கூட்டணியில் உருவாகும் புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவி!
மஹிந்திரா- ஃபோர்டு கூட்டணியில் புதிய எஸ்யூவி மாடல் உருவாக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புத்தம் புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இந்திய சந்தையில் இணைந்து செயல்பட இருப்பது குறித்த செய்தி முன்பே அறிந்ததே. கடந்த 2017ம் ஆண்டு இரு நிறுவனங்களும் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், கார்களுக்கான தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் எஞ்சின், கியர்பாக்ஸ் ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் இணைந்து செயல்பட இருப்பதாக இந்த கூட்டணி அறிவித்தது.
இதன்மூலமாக, முதலீடு வெகுவாக குறைக்க முடியும். வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி எஸ்யூவி காரை உருவாக்கி வருவதாக அரசல்புரசலாக இதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில், அந்த தகவல் உறுதியாகி இருக்கிறது. புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலை இணைந்து உருவாக்க இருப்பதாக மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி இன்று அறிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த புதிய எஸ்யூவி மாடலானது மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடலாக கருதப்படுகிறது. மேலும், இதே எஸ்யூவி ஃபோர்டு பிராண்டிலும் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறதாம்.
இந்தியாவில் இரு பிராண்டுகளிலும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதேபோன்று, இந்த எஸ்யூவியை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.
இதுதவிர்த்து, மின்சார கார் உருவாக்கப் பணிகள், கார் விற்பனை மற்றும் கார் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கான விரிவானத் திட்டமும் உள்ளது. புதிய மஹிந்திரா கார்களுக்கான குறைவான சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சினை ஃபோர்டு நிறுவனம் சப்ளை செய்ய இருக்கிறது.
மொத்தத்தில் இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் மிக நெருக்கமாக செயல்பட இருக்கின்றன. எதிர்காலத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகம் முழுவதையும் மஹிந்திரா ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் தகவல்்கள் கூறுகின்றன.
*Note: All images used are for representational purposes only
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..