Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
இந்தியாவில் இப்படி ஒரு கார் அறிமுகமாவது இதுதான் முதல் முறை... புதிய வரலாறு படைக்கப்போகும் மஹிந்திரா
புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம், மஹிந்திரா நிறுவனம் வரலாறு படைக்கவுள்ளது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிகப்படியான பெட்ரோல், டீசல் விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு அவை ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் மந்தமாகவே இருந்து வந்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகங்களும், அச்சங்களுமே இதற்கு முக்கிய காரணம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? முழுமையாக சார்ஜ் ஏற எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் வாடிக்கையாளர்களுக்கு இருந்து வந்தன. இதுதவிர சார்ஜிங் ஸ்டேஷன்கள் வேறு போதிய அளவிற்கு இல்லாததால், அச்சமும் நிலவி வந்தது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் 'டல்' அடித்து வந்ததற்கு மற்றொரு முக்கியமான காரணம் விலை. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம் என்பதாலும், வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்க தயக்கம் காட்டினர்.
ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட மத்திய அரசு, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் 2ம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
எனவே இனி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், மஹிந்திரா, டாடா, மாருதி, ஹூண்டாய், கியா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.
ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் பயணிக்கும் வகையிலும், விரைவாகவே சார்ஜ் ஏறி விடும் வகையிலுமான எலெக்ட்ரிக் கார்கள் இனி இந்திய மார்க்கெட்டில் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இந்த போட்டியில் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் முன்னணி வகிக்கிறது. மஹிந்திரா நிறுவனம் தனது கேயூவி100 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (e-KUV100), கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது.
இந்த கார் 2019ம் ஆண்டின் மத்தியில் ஷோரூம்களுக்கு வரும் என மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கடந்தாண்டு கூறியிருந்தார். இந்த சூழலில் இன்னும் 6 மாதங்களில், எலெக்ட்ரிக் கேயூவி100 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் காரில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். இதன் பேட்டரியை வெறும் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தாலே, 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறி விடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வெறும் உயர்த்தப்பட்ட ஹேட்ச்பேக் வகை கார்தான் என யாரேனும் வாதிட்டாலும், இதுதான் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி என அந்நிறுவனம் கூறுகிறது. எலெக்ட்ரிக் கேயூவி100 தவிர எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எக்ஸ்யூவி300 காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. தற்போது அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் கேயூவி100 விற்பனைக்கு அறிமுகம் ஆனதற்கு ஒரு வருடத்திற்கு பின்பாக, அதாவது அடுத்த ஆண்டின் மத்தியில் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எஸ்210 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இக்கார், ஒரு முறை சார்ஜ் செய்தால், 350-400 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!