Just In
- 53 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சஸ்பென்ஷனில் பிரச்னை... எக்ஸ்யூவி300 எஸ்யூவியை திரும்ப அழைக்கிறது மஹிந்திரா
குறைபாடுடைய உதிரிபாகத்தை மாற்றித் தருவதற்காக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு திரும்ப பெறும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் ரக மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. கடும் போட்டியையும் சமாளித்து விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையையும் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் சஸ்பென்ஷனில் உள்ள முக்கிய பாகத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளை திரும்ப அழைத்து ஆய்வு செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது. எவ்வளவு எண்ணிக்கை என்பது தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து பிரச்னை இருப்பதாக கருதப்படும் எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளின் உரிமையாளர்களுக்கு டீலர்கள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இல்லையெனில், மஹிந்திரா நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று காரின் வின் நம்பரை கொடுத்து உங்களது எக்ஸ்யூவி300 கார் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கை பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை சஸ்பென்ஷனில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், சஸ்பென்ஷனை கட்டணமில்லாமல் மாற்றித் தரப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வீஸ் மையத்தில் ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுத்து மாற்றித் தரப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையானது எக்ஸ்யூவி300 உரிமையாளர்களின் நலன் கருதி தாமாகவே முன்வந்து மஹிந்திரா நிறுவனம் எடுத்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களிலும் பிரச்னை இருப்பதாக தெரிகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது ரூ.8.10 லட்சம் முதல் ரூ.12.69 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தொடர்ந்து சிறந்த தேர்வாக முன்னிலைப்படுத்தி வருகிறது.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்