Just In
- 32 min ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 53 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Movies சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செம மழைதான் போங்க
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மஹிந்திரா எஸ்யூவி கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்... விலையும் உயர்கிறது!
மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. அதற்கான காரணங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வரும் ஜூலை 1 முதல் இந்தியாவில் ஏஐஎஸ் 145 என்ற புதிய பாதுகாப்பு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், கார்களில் பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக்கப்பட இருக்கின்றது. அதன்படி, மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி வகை கார்களில் இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க இருக்கிறது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, பொலிரோ, டியூவி300 மற்றும் கேயூவி100 ஆகிய எஸ்யூவிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இதனால், இந்த கார்களின் விலை ரூ.36,000 வரை உயர்த்தப்பட இருக்கிறது.
இதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் மராஸ்ஸோ கார்களிலும் சில பாதுகாப்பு வசதிகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால், இந்த கார்களின் விலை சற்றே உயர்த்தப்பட இருக்கிறது. பெரிய அளவில் இருக்காது.
அதேநேரத்தில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடல்கள் ஏஐஎஸ் 145 பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்ததால், விலை ஏற்றம் இல்லை. இதனால், பழைய விலையிலேயே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதன் காரணமாகவே, கார்களின் விலையை உயர்த்துவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறது.
புதிய ஏஐஎஸ் 145 பாதுகாப்பு விதிகளின்படி, டியூவல் ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இடம்பெற வேண்டும். இதுதவிர்த்து, வரும் அக்டோபர் 1 முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகள் அமலுக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
MOST READ: ஹூண்டாய் வெனியூ கார் டெலிவிரி துவங்கியது... வாடிக்கையாளர்கள் குஷி
மஹிந்திராவை தொடர்ந்து இதர நிறுவனங்களும் வரும் ஜூலை 1 முதல் கார்களின் விலையை உயர்த்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், டீலரில் முன்பதிவு செய்யும்போதே, விலை உயர்வு குறித்து தெரிந்து கொண்டு முன்பதிவு செய்வது நல்லது.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!